மேலும் அறிய

வழக்கே இல்லாமல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் - செருப்பை வைத்து தட்டி தூக்கிய போலீசார்

வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவரது மனைவி சக்தி விமலா வயது 30.இவர் திருவாரூர் மாவட்டம் எண்ணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்த நிலையில் கடந்த 27.04.2023 அன்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து சக்தி விமலா கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி செல்லும் சாலையில் கற்கத்தி பாலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வந்த இருவர் இவரது ஆறு சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து புகாரியின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கற்கத்தி பாலம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர்.அதில் yamaha fz இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வேகமாக செல்வது பதிவாகியுள்ளது.
 
இருப்பினும் அதில் வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த வண்டியில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் வெள்ளை நிற செருப்பு அணிந்து செல்வதை காவல்துறையினர் கவனித்தனர்.மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கும்பகோணம் தஞ்சாவூர் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்த நிலையில் கொரடாச்சேரி கடைவீதியில் எஃப் இசட் இருசக்கர வாகனத்தில் வெள்ளை செருப்பு அணிந்த இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதை கவனித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது இந்த இளைஞர்கள் தான் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் விசாரணையில் சென்னை பெருங்குளத்தூரில் தங்கி இருக்கும் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இமானுவேல் வயது 18 கொரடாச்சேரி வடக்கு மாங்குடி பகுதியைச் சேர்ந்த கோகுலேஷ் வயது 20 ஆகிய இருவரும் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
மேலும் அரசு பள்ளி ஆசிரியையிடம் பறித்த ஆறு சவரண் தாலி செயினை நாகூரில் உள்ள மீனவர் ஒருவரிடம் கீழே கிடந்து எடுத்ததா கூறி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு இமானுவேல் 50 ஆயிரத்தையும் கோகுலேஷ் 40 ஆயிரத்தையும் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
 
இதனையடுத்து காவல்துறையினர் அந்த செயினை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.பெரும்பாலும் சிறிய திருட்டுகளில் ஈடுபடும் இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று திருடிய பொருட்களை விற்று வந்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலும் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் காரைக்கால் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக இது போன்று பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டுள்ள இவர்கள் மீது எந்த வழக்கும் இதுவரை இல்லை என்பதும் எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளாமல் தொடர் திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் வெள்ளை நிற செருப்பை மட்டும் வைத்து துப்புத் துலக்கிய காவல்துறையினர் இந்த இரு களவாணிகளையும் தட்டி தூக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Embed widget