மேலும் அறிய

வழக்கே இல்லாமல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் - செருப்பை வைத்து தட்டி தூக்கிய போலீசார்

வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவரது மனைவி சக்தி விமலா வயது 30.இவர் திருவாரூர் மாவட்டம் எண்ணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்த நிலையில் கடந்த 27.04.2023 அன்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து சக்தி விமலா கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி செல்லும் சாலையில் கற்கத்தி பாலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வந்த இருவர் இவரது ஆறு சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து புகாரியின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கற்கத்தி பாலம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர்.அதில் yamaha fz இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வேகமாக செல்வது பதிவாகியுள்ளது.
 
இருப்பினும் அதில் வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த வண்டியில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் வெள்ளை நிற செருப்பு அணிந்து செல்வதை காவல்துறையினர் கவனித்தனர்.மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கும்பகோணம் தஞ்சாவூர் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்த நிலையில் கொரடாச்சேரி கடைவீதியில் எஃப் இசட் இருசக்கர வாகனத்தில் வெள்ளை செருப்பு அணிந்த இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதை கவனித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது இந்த இளைஞர்கள் தான் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் விசாரணையில் சென்னை பெருங்குளத்தூரில் தங்கி இருக்கும் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இமானுவேல் வயது 18 கொரடாச்சேரி வடக்கு மாங்குடி பகுதியைச் சேர்ந்த கோகுலேஷ் வயது 20 ஆகிய இருவரும் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
மேலும் அரசு பள்ளி ஆசிரியையிடம் பறித்த ஆறு சவரண் தாலி செயினை நாகூரில் உள்ள மீனவர் ஒருவரிடம் கீழே கிடந்து எடுத்ததா கூறி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு இமானுவேல் 50 ஆயிரத்தையும் கோகுலேஷ் 40 ஆயிரத்தையும் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
 
இதனையடுத்து காவல்துறையினர் அந்த செயினை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.பெரும்பாலும் சிறிய திருட்டுகளில் ஈடுபடும் இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று திருடிய பொருட்களை விற்று வந்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலும் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் காரைக்கால் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக இது போன்று பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டுள்ள இவர்கள் மீது எந்த வழக்கும் இதுவரை இல்லை என்பதும் எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளாமல் தொடர் திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் வெள்ளை நிற செருப்பை மட்டும் வைத்து துப்புத் துலக்கிய காவல்துறையினர் இந்த இரு களவாணிகளையும் தட்டி தூக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
ABP Premium

வீடியோ

மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
Teachers Protest: முற்றும் போராட்டங்கள்; முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது- சென்னையில் பரபரப்பு!
GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Embed widget