மேலும் அறிய

வழக்கே இல்லாமல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் - செருப்பை வைத்து தட்டி தூக்கிய போலீசார்

வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவரது மனைவி சக்தி விமலா வயது 30.இவர் திருவாரூர் மாவட்டம் எண்ணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்த நிலையில் கடந்த 27.04.2023 அன்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து சக்தி விமலா கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி செல்லும் சாலையில் கற்கத்தி பாலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வந்த இருவர் இவரது ஆறு சவரன் தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து புகாரியின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கற்கத்தி பாலம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர்.அதில் yamaha fz இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வேகமாக செல்வது பதிவாகியுள்ளது.
 
இருப்பினும் அதில் வண்டி என்னை கண்டுபிடிக்க முடியாத அளவு வேகத்தில் அந்த இரு சக்கர வாகனம் சென்றுள்ளதால் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த வண்டியில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் வெள்ளை நிற செருப்பு அணிந்து செல்வதை காவல்துறையினர் கவனித்தனர்.மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கும்பகோணம் தஞ்சாவூர் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்த நிலையில் கொரடாச்சேரி கடைவீதியில் எஃப் இசட் இருசக்கர வாகனத்தில் வெள்ளை செருப்பு அணிந்த இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதை கவனித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது இந்த இளைஞர்கள் தான் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் விசாரணையில் சென்னை பெருங்குளத்தூரில் தங்கி இருக்கும் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இமானுவேல் வயது 18 கொரடாச்சேரி வடக்கு மாங்குடி பகுதியைச் சேர்ந்த கோகுலேஷ் வயது 20 ஆகிய இருவரும் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
 
மேலும் அரசு பள்ளி ஆசிரியையிடம் பறித்த ஆறு சவரண் தாலி செயினை நாகூரில் உள்ள மீனவர் ஒருவரிடம் கீழே கிடந்து எடுத்ததா கூறி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு இமானுவேல் 50 ஆயிரத்தையும் கோகுலேஷ் 40 ஆயிரத்தையும் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
 
இதனையடுத்து காவல்துறையினர் அந்த செயினை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.பெரும்பாலும் சிறிய திருட்டுகளில் ஈடுபடும் இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று திருடிய பொருட்களை விற்று வந்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலும் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் காரைக்கால் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்களாக இது போன்று பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டுள்ள இவர்கள் மீது எந்த வழக்கும் இதுவரை இல்லை என்பதும் எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ளாமல் தொடர் திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் வெள்ளை நிற செருப்பை மட்டும் வைத்து துப்புத் துலக்கிய காவல்துறையினர் இந்த இரு களவாணிகளையும் தட்டி தூக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget