மேலும் அறிய

தலைக்கேறிய போதை: காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர்!

பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரித்துவாரமங்கலத்தில் போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் சமீப காலங்களில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நடைபெற்ற நிலையில் காவல்துறையினருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் குற்றம்சாற்றப்பட்டவர்களை கைது செய்யக்கூடாது மற்றும் போதையில் இருக்கும் குற்றவாளிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீப காலங்களில் காவல்துறையிடம் இளைஞர்கள் போதையில் அத்துமீறுவது அநாகரிகமாக நடந்து கொள்வது தகாத வார்த்தைகளில் காவல்துறையினரை பேசுவது ஆயுதங்களால் தாக்குவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது போன்ற வீடியோக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குற்ற பின்னணி உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உயரிய பதவியில் இருப்பவரின் பிள்ளைகளும் போதையில் அத்துமீறி காவலர்களை திட்டுவது தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தலைக்கேறிய போதை: காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர்!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம்  அரித்துவாரமங்கலம் கடைவீதியில் அரித்துவாரமங்கலம் மேல காலனி பகுதியைச் சேர்ந்த  24 வயதான சூர்யா என்கிற இளைஞர் போதையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.சூர்யா கடை வீதியில் நடுவில் நின்று கொண்டு பட்டா கத்தியுடன் அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் கடைவீதியில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் அலப்பறையை தாங்க முடியாத அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட போதை இளைஞர் சூர்யாவை எச்சரித்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார்.இதனால் கோபமடைந்த போதை இளைஞர் சூர்யா கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் காவலர் மணிகண்டனின் கழுத்தை அறுத்து உள்ளார். 


தலைக்கேறிய போதை: காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர்!

அதனைத் தொடர்ந்து போதையில் இருந்த சூர்யா அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி இருக்கிறான். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் கழுத்து அறுபட்ட நிலையில் இருந்த காவலர் மணிகண்டனை மீட்டு உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கண்டிக்க வந்த காவலர் மணிகண்டன் கழுத்து அறுபட்ட சம்பவம் என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை இளைஞர் சூர்யாவையும் தேடி வந்தனர். மேலும் அரித்துவாரமங்கலம் கடைவீதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர் அதில் போதை இளைஞர் சூர்யா பட்டா கத்தியுடன் வலம் வருவது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget