மேலும் அறிய

கோணிப்பையை வைத்து சிசிடிவி மறைப்பு: நகைக்கடையில் 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை

சிசிடிவி கேமிராவை சாக்கால் மூடி நகை கடையில் 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமிராவை சாக்கால் மூடி நகை கடையில் 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் 4 கிலோ வெள்ளி திருடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கடைகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பினும் இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை இருசக்கர வாகன திருட்டு மற்றும் வணிக கடைகளில் பூட்டை உடைத்து திருடுவது என்பது கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து விலைமதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பைக்குகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. 

கோணிப்பையை வைத்து சிசிடிவி மறைப்பு: நகைக்கடையில் 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவணிதம் கடைத் தெருவில் கலையமுதன் என்பவருக்கு சொந்தமான ரதிமீனா நகைக்கடை மற்றும் நகை அடகு கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து கலையமுதன் மற்றும் கடை ஊழியரான அருள்மணி ஆகியோர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ரதிமீனா ஜுவல்லரிக்கு அருகிலுள்ள முகமது இக்பால் என்பவருக்கு சொந்தமான நேஷனல் மளிகை கடையினை திறப்பதற்காக முகமது இக்பால் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் உள்ள ரொக்கம் 17,000 ருபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்த அவர் அருகிலுள்ள ஜுவல்லரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கலை அமுதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

கோணிப்பையை வைத்து சிசிடிவி மறைப்பு: நகைக்கடையில் 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை
 
இதனையடுத்து கலையமுதன் தனது நகை கடைக்கு வந்து பார்த்தபோது ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் உள்ளது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கலையமுதன் கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜுவல்லரியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவில் சாக்கை போட்டு மூடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
 
மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த கடைகளில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனை கவனிக்கும் திருடர்கள் முகமூடி அணிந்து கொண்டோ அல்லது சிசிடி கேமராவை உடைத்து விட்டோ, அல்லது சிசிடிவி கேமராவின் மேல் துணி போன்றவற்றை போட்டு விட்டோ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட திருட்டு சம்பவத்தில் கொள்ளையன் சிசிடிவி கேமராவின் மீது சாக்கை போட்டு மூடி விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ள கண்கொடுத்தவணிதம் என்பது உள்ளடங்கிய கிராம பகுதியாகும் இந்த இடத்தில் துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட காவல் துறையின் சார்பில் நகரப் பகுதிகளுக்கு மட்டுமல்லாது கிராம பகுதிகளுக்கும் அங்கு உள்ள காவல் நிலையம் மூலம் இரவு நேர ஓன்று பணிகளை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Onam festival Special Train : 100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
Embed widget