மேலும் அறிய

திருவாரூரில் கொடூர கொலை.. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்!

நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்கள், கடைகளை கற்களால் அடித்து நொறுக்கினர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்கள் கடைகளை கற்களால் அடித்து நொறுக்கினர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் பகுதி ஒன்றிய செயலாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வருகிறார். இவருக்கு செங்கல் சூளை, விவசாயம் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் பழனிவேல் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஸ்டாலின் பாரதி என்ற ஒரு மகளும் உள்ளனர். நடேச தமிழார்வனின் மகள் ஸ்டாலின் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நடேச தமிழார்வன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலம் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்ற போது பல்வேறு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது காவல்துறையினரிடம் இருந்து  தப்பி ஓடினார் என்ற வழக்கும் உள்ளது. அதே போல அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளும் நடேச தமிழார்வன் மீதும் உள்ளன.


திருவாரூரில் கொடூர கொலை.. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்!


இந்த நிலையில் இன்று மாலை சரியாக 5 மணி அளவில் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகில் உள்ள பெரியார் சிலை அமைந்துள்ள இடத்தில் நின்றுகொண்டிருந்த நடேச தமிழார்வனை இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அதனைத்தொடர்ந்து நடேச.தமிழார்வன் சரிந்து கீழே விழ அவரது தலையை மர்மகும்பல் துண்டித்து எடுத்துள்ளது. அங்கிருந்து தப்பித்து ஓடிய மர்ம கும்பலை பிடிக்க முயன்ற சிலர் மீதும் மர்ம கும்பல் தாக்கியதால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தகவலை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், நடேச.தமிழார்வன் உறவினர்களும், ஆதரவாளர்களும் நீடாமங்கலம் கடைவீதியில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். அதேபோல அனைத்து கடைகளுக்கும் கற்களை வீசி தாக்குதலை ஏற்படுத்தினர். மேலும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


திருவாரூரில் கொடூர கொலை.. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்!

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்ற முயற்சித்தபோது நடேச.தமிழார்வன் உடலை தர முடியாது எனவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நீடாமங்கலம் கடைவீதியில் நடேச.தமிழார்வனு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தமிழார்வன் உடலை கைப்பற்றிய போலீசார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து தமிழார்வனின் ஆதரவாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் கடைவீதி முழுவதும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் நீடாமங்கலம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget