மேலும் அறிய

Thanjavur Student Suicide: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் வைரலான வீடியோவை பதிவு செய்த முத்துவேல் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

தஞ்சையில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாணவியின் தந்தையான முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோர் இன்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தஞ்சை, வல்லம் டி.எஸ்.பி. பிருந்தாவன் முன்பு ஆஜராகியுள்ளனர். மேலும், அவர்களுடன் மாணவி பேசியதாக வைரலான வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவரும் ஆஜராகியுள்ளார். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Thanjavur Student Suicide: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை

முன்னதாக, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக மதம்மாறச் சொல்லி வற்புறுத்தியதாக பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது, மாணவியின் பெற்றோர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், வீடியோவை பதிவு செய்த விசாரணை அதிகாரியிடம் செல்போனையும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.  இதையடுத்து, இன்று விசாரணை அதிகாரியான வல்லம் டி.எஸ்.பி. முன்பு இன்று ஆஜராகியுள்ளனர். இவர்களிடம் டி.எஸ்.பி. பிருந்தாவன் விசாரணை மேற்கொள்ள உள்ளார். அந்த செல்போன் சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு செல்போனில் பதியப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டதா? என்றும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் முழுவதும் ஆய்வு செய்யப்பட உள்ளது.


Thanjavur Student Suicide: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை

இன்று நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரைண நடைபெற உள்ளது. முன்னதாக, மாணவி தற்கொலை வழக்கில் மாணவியை கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய விடுதி வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்திருந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா மாணவியின் தற்கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மாணவியை மதம்மாற்றச் சொல்லியதாக எந்தவொரு தகவலும் விசாரணையில் பெறவில்லை என்று கூறியிருந்தார். மேலும், நேற்று பேட்டி அளித்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவி தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மதம்மாறச் சொல்லியதாக விசாரணையில் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget