மேலும் அறிய

தீயசக்தியை விரட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை; மூன்று சாமியார்கள் கைது!

தீய சக்திகளை விரட்டுவதாக ஏமாற்றி மும்பை பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே ராஜ்கோட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒரு சாமியார் கைது.

ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோவிலின் 27 வயது பூசாரி 37 வயதான பெண்ணை "அவரது கஷ்டங்களை தீர்த்துவைப்பதாக" கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். "அகோரி ஆத்மா" வில் இருந்து விடுபட உதவுவதாக கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பையை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய இதுபோன்ற வழக்குகளில் இவர் மூன்றாவது ஆள் என்று போலீசார் தெரிவித்தனர். ராஜ்கோட்டைச் சேர்ந்த மஹந்த் கவுதம்கிரி கோசாய் மற்றும் சுவாமி பிரணவானந்த் சுக்லா மற்றும் மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் ஜோஷி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9 அன்று சுக்லா மற்றும் ஜோஷி கைது செய்யப்பட்ட நிலையில், கோசாய் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தீயசக்தியை விரட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை; மூன்று சாமியார்கள் கைது!

போலீசாரை அணுகிய மும்பையை சேர்ந்த பெண், பல ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் கூறி  இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள், பிளாக் மேஜிக் சட்டம், 2013 ஆகியவற்றின் கீழ் கற்பழிப்பு மற்றும் மோசடி செய்ததாக அந்த சாமியார்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அந்த பெண்ணிடம் "அகோரி ஆத்மா" இருப்பதாக கூறி நம்ப வைத்ததாகவும், அதிலிருந்து விடுபட அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் கூறினர். அந்த பெண், போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 2002 ல் திருமணம் செய்து கொண்டதாகவும், 2003 ல் கணவரை பிரிந்ததாகவும் கூறினார். "2009 ல் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். தனக்கும் கணவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதால், அவர் பல சாமியார்களை அணுகியுள்ளார், சுவாமி பிரணவானந்த் சுக்லா, 2011 ல் ஒரு தீர்வை தருவதாக கூறினாராம்." என்று ஒரு அதிகாரி கூறினார்.

தீயசக்தியை விரட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை; மூன்று சாமியார்கள் கைது!

"அவள் தீய சக்திகளால் சூழப்பட்டு இருப்பதாகவும், அந்த தீய சக்தியிலிருந்து விடுபடவும், அவள் சுக்லாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது." இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் சுக்லாவால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒரு தொழிலதிபர் அவளுக்கு உதவ முன்வந்ததாகவும், அவளது துயரத்தை கேட்டபின் அவளுக்கு ரூ. 35 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த பணத்தையும் சுக்லா எடுத்துச் சென்றதாகவும் போலீசார் கூறினர். அந்தப் பெண் சுமார் 10 வருடங்களாக அந்த சாமியார்களின் துஷ்பிரயோகத்தை சகித்துக் கொண்டாலும் தனது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்ந்தபோது, ஆகஸ்ட் மாதம் ​​அவர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது மீதமிருந்த ஒருவரும் கைதாகி உள்ளார்.

தலைப்பு செய்திகள்

" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Honda Activa e vs Bajaj Chetak: சிங்கிள் சார்ஜில் 127 கி.மீ., மாடர்ன் ஸ்டைல்! பஜாஜ் vs ஹோண்டா EV ஸ்கூட்டரில் எது பெஸ்ட்?
சிங்கிள் சார்ஜில் 127 கி.மீ., மாடர்ன் ஸ்டைல்! பஜாஜ் vs ஹோண்டா EV ஸ்கூட்டரில் எது பெஸ்ட்?
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
Embed widget