மேலும் அறிய

lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

 Ajith kumar lock Up Death: சிவகங்கையில் அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Ajith kumar lock Up Death: சிவகங்கையில் அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

அஜித்குமார் மரண வழக்கு

திருப்புவனம் அடுத்த மடப்புரம் கோயிலில் தற்காலிக காவலராக பணியாற்றி வந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கி காவல்துறையின் விசாரணையின்போது உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாக, உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில் அது பெரும் பிரச்னையாக வெடித்தது. பிரேத பரிசோதனையிலும் அஜித்குமாரின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 காவல்ர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

கொலை வழக்காக மாற்றம் - 5 காவலர்கள் கைது

இந்நிலையில் தான், அஜித்குமாரின் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு திருப்புவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா மற்றும் சங்கர மணிகண்டன் ஆகிய காவலர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை விளக்கம்:

காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “உயிரிழந்த அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் காவல் வாகன ஓட்டுனர் ராமச்சந்திரன், அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லாததால் அவர் கைது செய்யப்படவில்லை. காவல்நிலைய மரண வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன. காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சம் அற்ற முறையில் செயல்பட்டுள்ளது” என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

சிபிசிஐடி வசம் வழக்கு:

வழக்கமாக, பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேர அளவில் முடிந்து விடும். ஆனால், அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இது அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்வதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்.? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும், காவல்துறையின் அராஜகத்தை அந்த துறையின் அமைச்சரான முதலமைச்சர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லையா? என சரமாரிய கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து தான்,  டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது 5 காவலர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget