![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Sirkazhi: பாயாசம் எங்கடா..? ... சாம்பாரை ஊற்றிய மாப்பிள்ளை வீட்டார்.... திருமண நிச்சயதார்த்த விழாவில் களேபரம்
திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் - பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![Sirkazhi: பாயாசம் எங்கடா..? ... சாம்பாரை ஊற்றிய மாப்பிள்ளை வீட்டார்.... திருமண நிச்சயதார்த்த விழாவில் களேபரம் Sirkazhi Payasam Fight Erupts in Engagement Function for Payasam Sweet- TNN Sirkazhi: பாயாசம் எங்கடா..? ... சாம்பாரை ஊற்றிய மாப்பிள்ளை வீட்டார்.... திருமண நிச்சயதார்த்த விழாவில் களேபரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/34a0ef313987d8de901d571425fb31f71685966816958186_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் திருமண நாளும் அதற்கான நிச்சயதார்த்த தினமும் கண்டிப்பாக இடம் பிடித்து இருக்கும். உற்றார் உறவினர்கள் புடை சூழ மணமக்கள் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் இந்த திருமண சார்ந்த நிகழ்வில் மிகவும் தடல் புடலாக கொண்டாடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப திருமண வீட்டில் விருந்து உபசரிப்புகளும் இருக்கும். போட்டோ ஷூட்கள், திருமண சடங்குகள் என அன்றைய நாள் முழுவதுமே திருமண வீடு களை கட்டியிருக்கும். சில இடங்களில் திருமண வீட்டில் சில வினோத சம்பவங்களும் அரங்கேறி விடுகின்றன.
அதுவும் மணமகன் போதையில் திருமணத்திற்கு வருவது. மணமகள் வீட்டில் தகராறு செய்வது என சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அது தொடர்பான செய்திகளும் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகும். அந்த வகையில் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. சீர்காழியில் திருமண நிகழ்வு என்றும் பாராமல் அத்தனை உறவினர்கள் மத்தியிலும் இருவீட்டாரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர். கொஞ்சம் கூட சளைக்காமல் மாறி மாறி அடித்துக்கொண்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் மணமகன் வீட்டார் - பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அடிதடி சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சீர்காழி காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு உட்கொண்ட பொழுது சாப்பிட்டுடன் பாயாசமும் பரிமாறபட்டுள்ளது. அப்பொழுது பாயாசம் சரியில்லை என கூறி, அதனை பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாகா சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு, சாப்பிடும் போடும் டேபிள், சேர் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மண்டப வாசலிலல் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக அடித்து கொண்ட வீடியோ சமூக வளைதலத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் இருதரப்பையும் சமாதான செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)