மேலும் அறிய

திருவாரூரில் முன் விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளிக்கு கத்திகுத்து

’’புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரிந்த ஆறு நபர்கள் மீது 147, 148, 341, 294/b, 307 கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு’’

திருவாரூர் அருகே கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கட்டுமான தொழிலாளி ஆவார். தனது இருசக்கர வாகனத்தில் கொத்தங்குடியில் உள்ள வீட்டிற்கு சுரேஷ் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியது. சுரேஷுக்கு மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில் அவரை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.  

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - குழந்தை பிறந்த நிலையில் பைனான்ஸ் ஊழியர் கைது

 

திருவாரூரில் முன் விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளிக்கு கத்திகுத்து

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் சுரேஷ் மற்றும் அவருடைய நண்பர் காளிதாஸ் ஆகியோர் கடந்த ஆண்டு பண்டிதகுடி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் ரமேஷை அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுரேஷ் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் சிறையில் அடைத்த நிலையில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஒரு மணி நேரத்தில் ரமேஷ் தரப்பினர் காளிதாஸை கொலை செய்தனர். இதன் காரணமாக காளிதாஸ் தரப்பினர் ரமேஷின் தந்தை வேலாயுதம் வீட்டை அடித்து நொறுக்கினர். அதன் பின்னர் வேலாயுதம் மற்றும் அவரது மகன் பண்டிதகுடி கிராமத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு அம்மையப்பன் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். அதனை அடுத்து சுரேஷ் பண்டிதகுடி கிராமத்தில் இருந்து வெளியேறி கொத்தங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த நிலையில் இன்று சுரேஷ் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவாரூரில் முன் விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளிக்கு கத்திகுத்து

இந்தநிலையில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரிந்த ஆறு நபர்கள் மீது 147, 148, 341, 294/b, 307 கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுரேஷ் கண் விழித்தால் மட்டுமே சுரேஷை யார் யார் கத்தியால் குத்தினார்கள் என்பது குறித்த தகவல் தெரியும் எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் முதல்வரால் திறக்கப்பட்ட 138 ஆண்டுகள் பழமையான ராஜப்பா பூங்கா மின்னொளியில் ஜொலிக்கிறது

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Embed widget