மேலும் அறிய

Dowry Suicide: மீண்டுமா.. கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வரதட்சணை கொடுமை, கணவன் குடும்பத்தினர் அட்டூழியம்

Bengaluru Dowry Suicide: கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளான, கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Dowry Suicide: கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பெண் முன்னாள் ஐடி ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணி பெண் தற்கொலை:

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள, BTM லே-அவுட்டில் வசித்து வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஏற்கனவே சுமார் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பான ஷில்பா எழுதிய கடிதம் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் உயிரிழந்த ஷில்பா என்ற அந்த பெண்ணின் தாயார் சாரதா, தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக புகாரளித்துள்ளார். கணவன் பிரவீன், அவரது தாயார் சாந்தவ்வா ஆகியோரின் கொடுமை தாங்காமலேயே ஷில்பா உயிரை மாய்த்துக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஐடி ஊழியர் டூ பானி பூரி விற்பனையாளர்: 

புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பிரவீன் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிரபலமான ஐடி அலுவலகத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்த பிரவீன் கடந்த ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, BTM லே-அவுட்டில் பானி பூரி விற்று வந்துள்ளார். சாராதா அளித்த புகாரின்படி, தனது மகள் ஷில்பாவின் திருமணத்திற்கு 30 லட்ச ரூபாய் வரை செய்துள்ளார். 150 கிராம் தங்கத்தை வரதட்சணையாகவும் கொடுத்துள்ளார். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், ஷில்பா தனது அம்மா வீட்டிற்கே சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி பிரவீன் மீண்டும் அழைத்து வந்தாலும், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைமாத கர்ப்பிணிக்கு வரதட்சணை கொடுமை:

மகள் குறித்து பேசுகையில், “ஷில்பாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு பிரவீனும் அவரது தாயாரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இக்கட்டான சூழலிலும் 5 லட்ச ரூபாயை ரொக்கமாக ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால், பிரவீன் மீண்டும் பணம் கேட்டு தொல்லை செய்ய தொடங்கினார். எனது மகனை விவாகரத்து செய்து விடு, அப்போது தான் அதிக வரதட்சணை கொடுக்கும் வேறொரு பெண்ணை அவனால் திருமணம் செய்து கொள்ள முடியும் என மாமியார் மனரீதியாக துன்புறுத்தியுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் ஷில்பா தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க இருந்தார். ஆனால் பிரவீன் மற்றும் அவனது தாயாரின் கொடுமையை தாங்க முடியாமல் எனது மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள்” என சாரதா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget