மேலும் அறிய

சாமி விக்ரம்னு நினைப்பு.... - பீர் பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது!

தென்காசியில் பீர் பாட்டிலுடன் பாரில் ரகளை செய்ததாக போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்துள்ளனர். 

தென்காசியில் பீர் பாட்டிலுடன் பாரில் ரகளை செய்ததாக போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்துள்ளனர். 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானப் படம் சாமி. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்தில் விக்ரமின் ஆரம்ப காட்சிகள் கெத்தாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் முதல் பாடலான ‘திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலைக்கோட்டைடா திருப்பதிக்கே லட்டு தந்தான் சாமிடா’ என்ற பாடல் அனைத்து தரப்பு போலீஸ்காரர்களுக்கும் அப்போது உற்சாகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. இதில் நடிகர் விக்ரம் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்டு ஜெயிலுக்கு செல்வார். 


சாமி விக்ரம்னு நினைப்பு.... - பீர் பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது!

பின்னர் அடுத்த நாளே சிறையில் இருந்து வெளியே வருவார். தொடர்ந்து தான் ஆறுசாமி டெப்பிட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் என்று கூறி போலி போலீஸை மிரள வைப்பார். இந்த காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அதுபோல தற்போது தென்காசியில் ஒரு ஆறுசாமி தோன்றியிருக்கிறார். ஆனால் இவர் பெயர் ஆறுசாமியோ அல்லது விக்ரமோ இல்லை. அவர் பெயர் ராஜகுரு. 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றி வருபவர் ராஜகுரு. இவர் நேற்று முன்தினம் மாலையில் சேர்ந்தமரம் வடக்கு புறத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பாக்கிய சாமி மகன் ராஜ் என்பவரை, பார் விற்பனையாளரிடம் ஆம்லெட் வாங்கி வரக் கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுக்கவே ராஜகுரு ஆத்திரம் அடைந்து கையில் பீர் பாட்டிலுடன் அவரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், பாரில் மது கேட்டும் தகராறு செய்துள்ளார். அங்கு நின்றவர்களை போலீஸ்காரர் தகாத வார்த்தையில் திட்டியதோடு டாஸ்மாக் ஊழியர் அவரை தடுத்த போது அவரையும் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 


சாமி விக்ரம்னு நினைப்பு.... - பீர் பாட்டிலுடன் ரகளை செய்த போலீஸ் ஏட்டு கைது!

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசில் ராஜ் புகார் செய்தார். தகவலறிந்து வந்த போலீசார் ராஜகுருவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடமையை தவறாமல் செய்யும் எத்தனையோ போலீசார் இருக்கும்பட்சத்தில் இப்படி போலீஸ் உடையுடன் வந்து பாரில் மது அருந்தியதுமட்டுமில்லாமல் ரகளையும் ஈடுபட்டுள்ளார் என அங்கு இருந்தவர்கள் கிண்டல் செய்து கொண்டே கிளம்பினர். 

ரெய்டில் சிக்கும் 5வது மாஜி அமைச்சர் தங்கமணி: ஜூலை டூ டிசம்பர்... தொடரும் மாதம் ஒரு மந்திரி ஆபரேஷன்!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Embed widget