மேலும் அறிய

கோவை : வேலை செய்யவந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது! ஒருவர் தலைமறைவு!

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் பால்ராஜ் (26 ). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தைகள் இல்லாத நிலையில், வேலைக்காக கோவைக்கு வந்துள்ளனர். பால்ராஜ் தனக்கு தெரிந்த உறவினர் நாகேந்திரன் என்பவர் மூலம் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள மொய்தீன் குட்டி (31) என்பவரிடம் வேலைக்காக வந்துள்ளார். பால்ராஜ் வேலைக்காக வந்தபோது தனது 21 வயது மனைவியையும் உடன் அழைத்து வந்துள்ளார். அன்னூர் அருகேயுள்ள பசூரில் டீ டைம் என்ற பெயரில் பேக்கரி நடத்தி வரும் மொய்தீன் குட்டி, ஊரடங்கு என்பதால் கடை மூடப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குமுடியும் வரை வீட்டில் இருங்கள் என தம்பதியினரை ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் வருமானம் இல்லாததால் பால்ராஜ் அதே பகுதியில் உள்ள மில் ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இதனால் பால்ராஜின் மனைவி பகல் நேரங்களில் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்த 5-ஆம் தேதி பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டி மற்றும் அவரது நண்பர்களான சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக அப்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதேபோல 7-ஆம் தேதியும் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த பெண் தனது கணவர் பால்ராஜிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே தனது மனைவி சோகத்துடன் இருப்பதைப் பார்த்த பால்ராஜ் விசாரித்துள்ளார். அப்போது அப்பெண் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் தனது மனைவியிடம் புகாரளிக்க கூறியுள்ளார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் மொய்தீன் குட்டியின் நண்பர்களான பாலக்காட்டை சேர்ந்த சமீர் (28) மற்றும் சிகாபுதீன் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலைக்காக வந்த பெண்ணை மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி.. காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
Godzilla x Kong The New Empire Review: மான்ஸ்டர் வெர்ஸின் தல & தளபதி.. காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் பட விமர்சனம்!
Embed widget