மேலும் அறிய

மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!

19 வயது சிறுவனான பிரதாமேஷ் போக்சே, டிராம்பே காவல் நிலைய எல்லைக்குள் வரும் மகாராஷ்டிரா நகரில் கடந்த மே 3ம் தேதி மாலை 6 மணியளவில் ஷவர்மாக சாப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஷவர்மாவை விற்பனை செய்த ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ராசா என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், இதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

என்ன நடந்தது..? 

19 வயது இளைஞர் பிரதாமேஷ் போக்சே, டிராம்பே காவல் நிலைய எல்லைக்குள் வரும் மகாராஷ்டிரா நகரில் கடந்த மே 3ம் தேதி மாலை 6 மணியளவில் ஷவர்மாக சாப்பிட்டுள்ளார். மறுநாள் மே 4ம் தேதி காலை 7 மணிக்கு அவருக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறுவனின் குடும்பத்தினர் முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அப்போது டாக்டர் சிறிய அளவிலான வலி நிவாரணம் கொடுத்து, வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அன்றைய நாள் முழுவதும் பிரதாமேஷ் எதுவும் சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. 

அதனை தொடர்ந்து, மே 5ம் தேதி காலை 8 மணி முதல் பிரதாமேஷூக்கு மீண்டும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர், அவரை KEM மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டியுள்ளனர். அப்போது, மருத்துவர் பிரதாமேஷூக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மாலையில் இருந்து பிரதாமேஷூக்கு மீண்டும் அதே பிரச்சனைகள் தொடங்கியுள்ளது. மீண்டும் அவர் KEM மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததை கண்ட மருத்துவர்கள் பிரதாமேஷூயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், பிரதாமேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, மே 7ம் தேதி காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். 

இந்த உயிரிழப்பு தொடர்பாக  கடைக்காரர்கள் ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ராசா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தவிர, ஷவர்மாவின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

முதற்கட்ட விசாரணையில், கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட பிறகுதான் பிரதாமேஷின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், பின்னர் அவர் இறந்ததாகவும் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஐபிசி 304, 336, 273/34 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த வாரத்தில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி: 

இதற்கிடையில், இதேபோல் மும்பையின் கோரேகான் பகுதியில் கடை ஒன்றில் உணவை சாப்பிட்டு கடந்த இரண்டு நாட்களில் 12 பேர் உடல் உபாதைகள் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. இங்கேயும், மக்கள் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாலையே இந்த பாதிப்புகள் நிகழந்ததாக கூறப்படுகிறது.

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பன்னிரண்டு பேர் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை ஒன்பது பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
மயிலாடுதுறையில் பரபரப்பு: 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - முழு விவரம்!
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget