மேலும் அறிய

மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!

19 வயது சிறுவனான பிரதாமேஷ் போக்சே, டிராம்பே காவல் நிலைய எல்லைக்குள் வரும் மகாராஷ்டிரா நகரில் கடந்த மே 3ம் தேதி மாலை 6 மணியளவில் ஷவர்மாக சாப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஷவர்மாவை விற்பனை செய்த ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ராசா என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், இதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

என்ன நடந்தது..? 

19 வயது இளைஞர் பிரதாமேஷ் போக்சே, டிராம்பே காவல் நிலைய எல்லைக்குள் வரும் மகாராஷ்டிரா நகரில் கடந்த மே 3ம் தேதி மாலை 6 மணியளவில் ஷவர்மாக சாப்பிட்டுள்ளார். மறுநாள் மே 4ம் தேதி காலை 7 மணிக்கு அவருக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறுவனின் குடும்பத்தினர் முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அப்போது டாக்டர் சிறிய அளவிலான வலி நிவாரணம் கொடுத்து, வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அன்றைய நாள் முழுவதும் பிரதாமேஷ் எதுவும் சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. 

அதனை தொடர்ந்து, மே 5ம் தேதி காலை 8 மணி முதல் பிரதாமேஷூக்கு மீண்டும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர், அவரை KEM மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டியுள்ளனர். அப்போது, மருத்துவர் பிரதாமேஷூக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மாலையில் இருந்து பிரதாமேஷூக்கு மீண்டும் அதே பிரச்சனைகள் தொடங்கியுள்ளது. மீண்டும் அவர் KEM மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததை கண்ட மருத்துவர்கள் பிரதாமேஷூயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், பிரதாமேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, மே 7ம் தேதி காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். 

இந்த உயிரிழப்பு தொடர்பாக  கடைக்காரர்கள் ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ராசா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தவிர, ஷவர்மாவின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

முதற்கட்ட விசாரணையில், கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட பிறகுதான் பிரதாமேஷின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், பின்னர் அவர் இறந்ததாகவும் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஐபிசி 304, 336, 273/34 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த வாரத்தில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி: 

இதற்கிடையில், இதேபோல் மும்பையின் கோரேகான் பகுதியில் கடை ஒன்றில் உணவை சாப்பிட்டு கடந்த இரண்டு நாட்களில் 12 பேர் உடல் உபாதைகள் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. இங்கேயும், மக்கள் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாலையே இந்த பாதிப்புகள் நிகழந்ததாக கூறப்படுகிறது.

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பன்னிரண்டு பேர் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை ஒன்பது பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget