மேலும் அறிய

Crime: அசந்த நேரத்தில் கைப்பையை  ஆட்டையப்போட்ட திருடன்; செல்போன் சிக்னலால் சிக்கிய பரிதாபம்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையில் வைத்திருந்த 9 சவரன் நகை, இரண்டு செல்போன் மற்றும்  5000 ரூபாய் பணத்தை திருடி சென்ற நபரை 2 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ராதாநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மனைவி 62 வயதான மைதிலி. இவர் தனது உறவினர் வீட்டிக்கு செல்வதற்காக பல பைகளுடன் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.  அப்போது பேருந்து நிலையத்தில் பூ வாங்கி அதனை தனது தலையில் வைத்து கொள்ளுவதற்காக தன் கையில் வைத்திருந்த மணி பர்ஸை தரையில் வைத்துள்ளார்.


Crime: அசந்த நேரத்தில் கைப்பையை  ஆட்டையப்போட்ட திருடன்; செல்போன் சிக்னலால் சிக்கிய பரிதாபம்

அப்போது மர்ம நபர் ஒருவர் மைதிலி தரையில் வைத்திருந்த கைப்பையை, வெகு இயல்பாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து லாவகமாக நழுவினார். சிறிது நேரம் கழித்து கீழே பார்த்தபோது கைப்பை காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்த மைதிலி பதற்றம் அடைந்து, அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவரது கைப்பை கிடைக்காததால், மயிலாடுதுறை பேருந்து நிலையம் வாசலில் உள்ள போலீஸ் பீட்டில் உள்ள காவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து, பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவு பார்த்த போது அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரது கை பையை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் பேருந்தில் ஏறி சீர்காழி நோக்கி செல்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மைதிலியின் செல்போன் சிக்னலை வைத்து சீர்காழி நோக்கி விரைந்த தனிப்படை போலீசார் அங்கு ஒயின்ஷாப்பில் மது அருந்திக் கொண்டிருந்த சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.


Crime: அசந்த நேரத்தில் கைப்பையை  ஆட்டையப்போட்ட திருடன்; செல்போன் சிக்னலால் சிக்கிய பரிதாபம்

விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பதும், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து மைதிலியின் 9 சவரன் நகை மற்றும் 5000 ஆயிரம் ரொக்கம் அடங்கிய கைப்பையை திருடி கொண்டு பேருந்தில் ஏறி சீர்காழி வந்து மது அருந்தி கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சுவாமிநாதனை கைது செய்து, ஒன்பது சவரன் நகை இரண்டு செல்போன் மற்றும் ரொக்க பணத்தினை கைப்பற்றி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருட்டு போன இரண்டு மணி நேரத்தில் விரைந்து சென்று திருடனை பிடித்து திருடுபோன பொருட்களை மீட்ட தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்பந்தல் கடைவீதியில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சி சங்கரன்பந்தல் கடை வீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 5000 நிவாரண உதவி வழங்கிட கோரியும், இலுப்பூர் வடக்கு தெருவில் உள்ள உட்புறச் சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைக்க கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 35000 இழப்பிடு தொகையை காலதாமதம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும், ஊருக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வடியவைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இலுப்பூர் ஊராட்சி உத்திரங்குடி ஊராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


Crime: அசந்த நேரத்தில் கைப்பையை  ஆட்டையப்போட்ட திருடன்; செல்போன் சிக்னலால் சிக்கிய பரிதாபம்

போராட்டத்தை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக பொறையாரில் இருந்து சங்கரன்பந்தல் வழியாக மயிலாடுதுறை செல்லக்கூடிய சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்
Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
Embed widget