கைவிட்ட பிள்ளைகள்.. தற்கொலைக்கு முயன்ற பெற்றோர்.. தந்தை படுகாயம், தாய் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயதான தம்பதியர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 69 வயதான இளங்கோவன். ஹோமியோபதி மருத்துவரான இவர் மயிலாடுதுறை திராவிடர் கழக நகர தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 59 வயதான செந்தாமரை என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மனைவி செந்தாமரை சிறுநீரக கோளாறால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் விலகும் முக்கிய நடிகை!
மனமுடைந்த பெற்றோர்
இந்நிலையில் மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகி மகள்கள் இருவரும் வெளியூரிலும், மகன் இனியவன் வீட்டின் மேல் பகுதியிலும் வசித்து வருகின்றனர். வயதான தம்பதியான இளங்கோவன் செந்தாமரையை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமடைந்த இளங்கோவன், தற்கொலை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்தவிட்டு இளங்கோவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வெடித்து சிதறிய சிலிண்டர்
அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து தரைமட்டமானது. இளங்கோவன் செந்தாமரை இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் விசாரணை
இளங்கோவன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி கலைவாணி, இளங்கோவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த சூழலில் இது குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hydrogen Bomb: அணுகுண்டை விட ஆபத்தானதா ஹைட்ரஜன் குண்டு? எந்தெந்த நாடுகளிடம் இருக்கிறது தெரியுமா?
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

