மேலும் அறிய

பாலியல் வன்கொடுமை! ஆசிட் வீச்சு! பக்கத்து வீட்டுக்காரனால் குழந்தைகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை!

பாதிக்கப்பட்டவரின் மூத்த குழந்தையான ஆறு வயது சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அசாமில் பக்கத்து வீட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவளுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே அவள் மீது ஆசிட் ஊற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே வாய் தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து 30 வயது பெண் ஒருவர் பக்கத்து வீட்டுகாரர்களை சரமாரியாக சாடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டு 28 வயது நபர் அந்த பெண்ணின் கணவர் இல்லாத போது வீட்டில் நுழைந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர்.

உடனே அந்த பெண் அந்த நபரை வெளியேறும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர் மீது ஆசிட்டையும் ஊற்றியுள்ளார். இதைப்பார்த்த குழந்தைகள் செய்வதறியாது கதறியுள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர் மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

வெளியே சென்றிருந்த கணவன் வீட்டிற்கு வந்தபோது அந்த பெண்ணின் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்டிருந்தன. மேலும் ஆசிட் பட்ட இடங்களில் படுகாயம் அடைந்திருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார்.

புகாரில் குற்றம் சாட்டப்பட்ட நபர் என் மனைவியை சித்ரவதை செய்துள்ளார். இதை என் குழந்தைகள் பார்த்துள்ளனர். அவன் ஏற்கெனவே நிறைய பெண்களிடம் ஆபாசமாக நடந்துள்ளான். இதனால் ஊர் பஞ்சாயத்து கூட்டியும் பேசியுள்ளனர்.

என் மனையிடமும் தொலைபேசி எண்களை கேட்டு அவள் தர மறுக்கவே மிரட்டி சென்றுள்ளான்.

மனைவிக்கு இவ்வாறு நடந்ததும் அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல சொன்னார்கள். நாங்கள் போலீசிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

மேலும் கணவரின் புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடி வருகிறோம். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம்.

பாதிக்கப்பட்டவரின் மூத்த குழந்தையான ஆறு வயது சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு நாங்கள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வோம்” எனத் தெரிவித்தனர்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget