மேலும் அறிய

பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பூங்காக்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்கள், பாழடைந்த மண்டபங்களில் சுற்றித் திரிகின்றனர். மேலும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் ஒட்டுவதற்கு பயன்படும் அனோபாண்டை  பசையினை ஒரு குழலில் அடைத்து அதனை குலுக்கி உருவாகும் காற்றை சுவாசித்து அதன் மூலம் புதுவிதமான போதையை சில மாணவர்கள் ஏற்றிக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி கூல் லிப், கஞ்சா போதைக்கும் அடிமையாவதாகவும் பலத்த குற்றச்சாற்று எழுந்துள்ளது. 


பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்

இந்நிலையில்  மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலர் வகுப்புகளை கட் அடித்துவிட்டு நகராட்சி பூங்காவில் சுற்றித்திரிந்தனர். அப்போது பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் என்பவர் உதவிக்கு மற்றொரு ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு அழைத்து சென்றார். அதிலும் பாதி மாணவர்கள் ஆசிரியரை கண்டவுடன் பூங்கா சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர். 


பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, அரசு பள்ளிகளில் வெளியூர் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். அவர்கள் படிப்பு குறித்து பெற்றோர் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் தண்டனை மாணவர்களுக்கு வழங்கும் விதத்தில் விதிகளை திருத்த வேண்டும் என்றும், தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடந்து வருவதாகவும்,  மாணவர்கள் அனோபாண்டை ஒரு குழலில் அடைத்து அதனை குலுக்கி உருவாகும் காற்றை சுவாசித்து அதன் மூலம் புதுவிதமான போதையை சில மாணவர்கள் ஏற்றிக் கொள்வதாகவும் வேதனை தெரிவித்து இருந்தனர். 


பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்த உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதனிடம் மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.  மாணவர்களை ஒழுங்காக கண்காணிப்பதாகவும்,  மாணவர்கள் மீது பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் பூங்காக்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் தினமும் ஒரு முறை ரோந்து சுற்றி பள்ளி மாணவர்களை அறிவுரை கூறி அனுப்ப வேண்டும் என்று அப்போது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்

மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தினால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வகுப்புகளை கட்டடித்து விட்டு ஊர் சுற்றும் மாணவர்களை கண்டிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் பூங்கா உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களில் போதையில் மயங்கிக் கிடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


பூங்காவில் தஞ்சம் புகுந்த மாணவர்கள் - நேரில் சென்று அறிவுரை வழங்கிய மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை நகர்பகுதியில் டெங்கு ஒழிப்புப் பணி குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு மையத்தில் அமைந்துள்ள வரதாச்சாரியார் நகராட்சி பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பூங்காவில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளை புறக்கணித்து, சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து அறிவுரை கூறிய மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட காவலர்களை அழைத்து, பூங்கா உள்ளிட்ட மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் தினசரி ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Embed widget