மேலும் அறிய

தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே மேலப்பாதி கிராமத்தில் தந்தையை முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் கத்தியால் குத்திக் கொலை நிலையில், மகனை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கா தங்கையை திருமண செய்த நபர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி வாய்க்காங்கரைத் தெருவை சேர்ந்தவர் 52 வயதான சிவக்குமார். இவர் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோயில் எதிரே சாலையோரம் கடை அமைந்து கரும்பு ஜுஸ் விற்பனை செய்து வந்தார். இவருக்கு 50 வயதான ஜெயசெல்வி, 40 வயதான ரேவதி ஆகிய இரண்டு ( இருவரும் சகோதரிகள்) மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 26 வயதான சிவசர்மா, 25 வயதான சபரி கிருஷ்ணன், 24 வயதான அபினேஷ் ஆகிய மூன்று மகன்களும், 20 வயதில் சிவப்பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அபினேஷ் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். 


தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு

இரண்டாவது மனைவி ரேவதிக்கு 14 வயதில் சிவவர்மா, 12 வயதில் தீபலெட்சுமி, 9 வயதில் கலியவரதன் என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சிவக்குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டாவது மனைவி ரேவதியுடன் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோயில் எதிரே வாய்க்கால் ஓரம் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.  

குடும்ப தகராறு 

இந்நிலையில் முதல் மனைவி ஜெயசெல்வியின் மூத்த மகன் சிவசர்மா பட்டா கேட்டு தனது தந்தை சிவக்குமாரிடம் ஏற்கனவே பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று மாலை சிவக்குமார் கரும்பு ஜுஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு அவரது முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் இருந்த அபினேஷ் வந்து, தனது தந்தை சிவகுமாரிடம் பட்டா கேட்டு பிரச்சினை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ், தான் மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து தந்தை சிவக்குமாரை கொடூரமாக குத்தியுள்ளார். இதில் இதயம் மற்றும் குடல் வெளியே வந்தநிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து அவர் உயிரிழந்துள்ளார்.


தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு

காவல்துறையினர் தீவிர விசாரணை 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபினேஷை கைது செய்து செம்பனார் கோயில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தில் சொத்து பிரச்னையால் இந்த கொலை நடந்ததா? அல்லது தந்தை செலவுக்கு பணம் கொடுக்காமல் தரகுறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் கொலை நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget