மேலும் அறிய

தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே மேலப்பாதி கிராமத்தில் தந்தையை முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் கத்தியால் குத்திக் கொலை நிலையில், மகனை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கா தங்கையை திருமண செய்த நபர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி வாய்க்காங்கரைத் தெருவை சேர்ந்தவர் 52 வயதான சிவக்குமார். இவர் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோயில் எதிரே சாலையோரம் கடை அமைந்து கரும்பு ஜுஸ் விற்பனை செய்து வந்தார். இவருக்கு 50 வயதான ஜெயசெல்வி, 40 வயதான ரேவதி ஆகிய இரண்டு ( இருவரும் சகோதரிகள்) மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 26 வயதான சிவசர்மா, 25 வயதான சபரி கிருஷ்ணன், 24 வயதான அபினேஷ் ஆகிய மூன்று மகன்களும், 20 வயதில் சிவப்பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூன்றுபேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அபினேஷ் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். 


தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு

இரண்டாவது மனைவி ரேவதிக்கு 14 வயதில் சிவவர்மா, 12 வயதில் தீபலெட்சுமி, 9 வயதில் கலியவரதன் என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சிவக்குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டாவது மனைவி ரேவதியுடன் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோயில் எதிரே வாய்க்கால் ஓரம் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.  

குடும்ப தகராறு 

இந்நிலையில் முதல் மனைவி ஜெயசெல்வியின் மூத்த மகன் சிவசர்மா பட்டா கேட்டு தனது தந்தை சிவக்குமாரிடம் ஏற்கனவே பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று மாலை சிவக்குமார் கரும்பு ஜுஸ் வியாபாரம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு அவரது முதல் மனைவியின் மூன்றாவது மகன் மதுபோதையில் இருந்த அபினேஷ் வந்து, தனது தந்தை சிவகுமாரிடம் பட்டா கேட்டு பிரச்சினை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ், தான் மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து தந்தை சிவக்குமாரை கொடூரமாக குத்தியுள்ளார். இதில் இதயம் மற்றும் குடல் வெளியே வந்தநிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து அவர் உயிரிழந்துள்ளார்.


தந்தையை கத்தியால் குத்திய மகன்! சொத்து தகராறா? மதுபோதையில் நடந்த கொலையா? மயிலாடுதுறையில் பரபரப்பு

காவல்துறையினர் தீவிர விசாரணை 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபினேஷை கைது செய்து செம்பனார் கோயில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தில் சொத்து பிரச்னையால் இந்த கொலை நடந்ததா? அல்லது தந்தை செலவுக்கு பணம் கொடுக்காமல் தரகுறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் கொலை நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதி மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
" சொத்துக்காக விஷ ஊசி போட்டு கொலை " மாரடைப்பு என நாடகம் !! இறுதியில் நடந்த சோகம்
பணம் வாங்கிய வீடியோ வைரல்: தவெக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. அதிரடி காட்டிய போலீசார்!
பணம் வாங்கிய வீடியோ வைரல்: தவெக பிரமுகருக்கு நேர்ந்த கதி.. அதிரடி காட்டிய போலீசார்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
பணி முடிந்து வீடு திரும்பியிருக்க வேண்டிய தந்தை... டாஸ்மாக் வாசலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
Embed widget