மேலும் அறிய

Crime: மனைவி, மச்சான், கொழுந்தியாளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர் - நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மனைவியின் சகோதரர் மற்றும் மனைவியின் சகோதரியை இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது மோரினா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பக்சினி கிராமத்தில் வசித்து வருபவர் திரிலோக் பர்மர். இவருக்கும் பிந்த் மாவட்டத்தில் உள்ள அடெர் பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்றது முதலே திரிலோக் – ராக்கி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

குடும்பத் தகராறு:

ராக்கிக்கு யுவராஜ் என்ற சகோதரனும், ஜூலி என்ற சகோதரியும் உள்ளனர். அவர்கள் இருவரும் ராக்கிக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த வாரம் வழக்கத்தை விட அதிகளவில் சண்டை நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில், தங்களது சகோதரியின் பிரச்சினையை நேரில் சென்று சந்திப்பதற்காக ஜூலி மற்றும் யுவராஜ் திரிலோக் பர்மரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு திரிலோக் பர்மரின் தாயை நேரில் கண்டு பேசி ராக்கியை தங்களுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராக்கி, யுவராஜ் மற்றும் ஜூலி ஆகிய மூன்று பேரும் அந்த ஊரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

துப்பாக்கியால் சுட்டுக்கொலை:

தனது மனைவி அவரது சகோதரன் மற்றும் சகோதரியுடன் அவரது தாய் வீட்டிற்கு செல்வதை அறிந்த திரிலோக் பர்மர் கடும் ஆத்திரம் அடைந்தார். ஆத்திரத்தில் தன் வீட்டில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர்களை தேடி பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அங்கு அவர்களை கண்ட திரிலோக் பர்மர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன் மனைவி ராக்கி, மச்சான் யுவ்ராஜ் மற்றும் மனைவியின் சகோதரி ஜூலி ஆகிய மூன்று பேரையும் சுட்டார்.

துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்தனர். அங்கு ராக்கி மற்றும் யுவராஜ் ரத்த வெள்ளத்தில் பேருந்து நிறுத்தத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். ஜூலி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அவர்கள் 3 பேரையும் சுட்டுக்கொன்ற திரிலோக் பர்மர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

பேருந்து நிறுத்தத்திலே மனைவியையும் அவரது சகோதரன் மற்றும் சகோதரியையும் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மேலும் படிக்க: Crime : காது குத்து விழாவுக்கு அழைத்து கொலை.. உறவினரை அடித்துக்கொன்ற நபர்.. மூவர் கைது

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget