மேலும் அறிய

திருவாரூரில் காவல் நிலையம் முன் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மானந்தாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் 36 வயதான சுதாகர் தனக்கு ஏற்பட்ட இருதய பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உடல்நிலை சரியான பிறகு இந்த பணத்தை திருப்பித் தரும்படி பிரசாந்த், சுதாகரிடம் அடிக்கடி கேட்ட நிலையில் வாங்கிய ஒரு லட்சத்தை தவனை முறையில் கொடுத்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் 90 ஆயிரம் பணத்தை சுதாகர் திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள 10 ஆயிரம் பணத்தை கொடுக்க வேண்டும் என பிரசாந்த் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சுதாகர் கொடுக்க வேண்டிய 10,000 ரூபாய் பணத்தில் பிரசாந்த் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கணவரை பிரசாந்த் தாக்கி விட்டதாகவும் கூறி சுதாகரின் மனைவி சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவாரூரில் காவல் நிலையம் முன் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையில் இந்த புகார் குறித்து பேரளம் காவல் நிலையத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31  ஆம் தேதி காவல் நிலையத்திற்கு தனது  மனைவியடன் வந்த சுதாகர்  பேரளம் காவல் நிலைய வளாகத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி  தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் 80 சதவீத தீக்காயங்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

திருவாரூரில் காவல் நிலையம் முன் தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் சுதாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மைத்துனரான அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவரை பேரளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சுதாகர் தீக்குளித்து மருத்துவமனை வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பிரசாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றப்பட்டு பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.காவல்துறையினர் தனது புகழுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல் நிலைய வளாகத்திலேயே வாலிபர் தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுதாகரின் இறுதிச்சடங்கை முன்னிட்டு அவரது வீடு மற்றும் கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget