மேலும் அறிய

Crime : மனைவி மீது சந்தேகம்..! 2 மாதக் குழந்தையை தரையில் வீசிக் கொன்ற கணவன்..! பஞ்சாபில் கொடூரம்

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கருதி 2 மாதக் குழந்தையை தரையில் வீசி கொடூரமாக கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று லூதியானா. இந்த மாநிலத்தில் உள்ள எல்.ஐ.ஜி. துக்ரி குடியிருப்பில் வசித்து வருபவர் அங்கித் பிரிஷ்த். இவர் கடந்தாண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மோனிகாவிற்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் ஆகும். அங்கித்திற்கு இந்த திருமணம் முதல் திருமணம் ஆகும்.

அங்கித்திற்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுவிற்கு அடிமையான அங்கித் கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். மது, கஞ்சாவிற்கு அடிமையான அங்கித் முறையாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், மோனிகாவிற்கு தொல்லை அளித்தும் வந்துள்ளார்.


Crime : மனைவி மீது சந்தேகம்..! 2 மாதக் குழந்தையை தரையில் வீசிக் கொன்ற கணவன்..! பஞ்சாபில் கொடூரம்

மோனிகாவை திருமணம் செய்ய அங்கித் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடையை மீறி திருமணம் செய்த அங்கித் – மோனிகா தம்பதியினர் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அங்கித் குடும்பத்தினர் முயற்சித்தாக கூறப்படுகிறது. மேலும், மோனிகா 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அந்த கருவை கலைக்க அங்கித் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். மேலும், அந்த குழந்தைக்கு அங்கித் தந்தை கிடையாது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோனிகாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மே 2-ந் தேதி அங்கித் குடும்பத்தினர் அங்கித்திடம் மோனிகாவை விட்டு வருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆத்திரத்தில் இருந்த அங்கித் 2 மாத குழந்தை என்றும் பாராமல் அந்த குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி வீசியுள்ளார். இதனால், சில மணி நேரம் சுயநினைவின்றி குழந்தை இருந்துள்ளது. பின்னர். குழந்தையின் உடல் நீல நிறமாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச்சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Crime : மனைவி மீது சந்தேகம்..! 2 மாதக் குழந்தையை தரையில் வீசிக் கொன்ற கணவன்..! பஞ்சாபில் கொடூரம்

மே 2-ந் தேதி முதல் அங்கித் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். மேலும், செல்போன் மூலமாக மோனிகாவிற்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். மோனிகா அளித்த புகாரின் பேரில் அங்கித்தை போலீசார் கைது செய்து அவர் மீது 304-ஏ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சந்தேகத்தால் 2 மாத குழந்தையை தரையில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget