மேலும் அறிய

Crime: பிறப்புறுப்பில் குத்தி, கண்களை பிடுங்கி, மனைவி மீது கொடூர தாக்குதல் - கணவன் ஆத்திரத்திற்கான காரணம் என்ன?

Crime: கத்தியால் குத்தி கண்களை பிடுங்கி மனைவியை கணவனே கொடூரமாக தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Crime: மனைவியின் அந்தரங்க பாகங்கள் உட்பட பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாக கணவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்:

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில், தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த, கணவர் அந்த பெண்ணை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்த நபர் கத்தியால் குத்தி, மனைவியின் இரு கண்களையும் பிடுங்கி எறிந்ததாகவும், அவரது அந்தரங்கப் பகுதிகள் உட்பட பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

புதன்கிழமை போஹ்ரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சோட்டு கான் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தனது மனைவியின் மொபைல் போனை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மனைவியைத் தாக்கிய பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில் பெண்:

பாதிக்கப்பட்ட பெண் அலறல் சத்தக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த பிறகுதான், அவர் இரத்த வெள்ளத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தற்போது போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவான கணவரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.

மனைவியை பழிவாங்கிய கணவன்:

இதனிடையே, அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகளைக் கொன்றுவிட்டு, வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் டீசல் என்ஜின் உதவியாளராக பணிபுரிந்த அந்தப் பெண், தனது முதல் கணவரின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரண்டாவது கணவர் மீது புகாரளித்தார். அதன் பிறகு, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே அந்த நபர் இருவரையும் கொலை செய்துள்ளார். இறந்தவர்கள் ஜூலி தேகா, அவரது 15 வயது மகள் மற்றும் லோஹித் தாகுரியா (47) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget