அண்ணியுடன் கள்ள உறவு !! தடையாக இருந்த மனைவி !! கணவரே செட்டிங் போட்டு செய்த சம்பவம்
அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்புக்கு தடையாக இருந்த மனைவியை கொலை செய்த கணவன்

மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை
பெரம்பலூர் எளம்பலூர் கிராமத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியராக பணிபுரிபவர் ராஜ்குமார். இவர் தனது மனைவி பிரவீனாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற போது மர்ம கும்பல் ஒன்று பிரவீனாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளது. தொடக்கத்தில் மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறி தானும் காயமடைந்தது போல் ராஜ்குமார் நாடகமாடி உள்ளார்.
ஆனால் காவல் துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தன் மனைவியை தீர்த்துக்கட்ட ராஜ்குமாரே தனது அண்ணியுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவியது அம்பலமானது. இந்த கொலைக்கு மூல காரணமாக அமைந்தது ராஜ்குமாருக்கும் , அவரது அண்ணி ஆனந்திக்கும் இடையே இருந்த கள்ளக் காதல் என்று கூறப்படுகிறது. இருவரும் முன்னதாக வீட்டை விட்டு ஓடி உள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினர் , போலீசார் எச்சரித்துள்ளனர்.
மனைவியை தீர்த்து கட்ட அண்ணியுடன் சேர்ந்து திட்டம்
தொடர்ந்து தொடர்பை தொடர துடித்த ராஜ்குமாருக்கு தனது மனைவி பிரவீணா பெரும் முட்டுக் கட்டையாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அண்ணி ஆனந்தியை ஊர் மக்கள் முன்னிலையில் பிரவீனா கண்டித்து அவமானப்படுத்தியதால், ஆத்திரமடைந்த ராஜ்குமாரும் ஆனந்தியும் சேர்ந்து பிரவீனாவை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஆனந்தியின் உறவினரான தீபக் என்ற ரௌடிக்கு 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி சம்பவத்தன்று இரவு வேலைக்கு செல்வதாக கூறி ராஜ்குமார் தனது மனைவியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரவீனாவை சரமாரியாக தாக்கி, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
முன்னுக்கு பின் முரணான வாக்கு மூலம்
இச்சம்பவம் வழிப்பறி கொலை போல தெரிய வேண்டும் என பிரவீனாவின் நகைகளை திருடி , ராஜ்குமார் மீதும் லேசான காயங்களை ஏற்படுத்தி தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ராஜ்குமார் அளித்த முன்னுக்குப் பின் முரணான வாக்கு மூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.
போலீசாரின் தீவிரப் புலனாய்வில் ராஜ்குமார் மற்றும் ஆனந்திக்கு இடையே நடந்த செல்போன் உரையாடல்கள் மற்றும் கூலிப்படைக்கு தரப்பட்ட பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஆதாரமாக சிக்கின. அதன் அடிப்படையில் ராஜ்குமார், ஆனந்தி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 இளைஞர்கள் என மொத்தம் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















