மேலும் அறிய

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதிகாலை தொடங்கிய சோதனை 

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனையில் ஈடுபட்டனர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

என்ஐஏ 

தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும். இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

மயிலாடுதுறை மாவட்டத்தில்15 குழுக்கள் சோதனை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில், ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சீர்காழி காவல்துறையினர் துணையுடன் 15 குழுக்களாக அதிகாரிகள் வருகை புரிந்து 15 வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஒருசில வீடுகளில் செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்தனர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

திருமுல்லைவாசல் - அல் பாஷித்

சென்னையில் கைது செய்யப்பட்ட அல் பாஷித்தின் நண்பர்கள், உறவினர்கள் என 15 வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாஷிதை 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமுல்லைவாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு மணி நேர விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள், சிடிகள், பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்குத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்று வந்தது.  


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

இந்நிலையில் அல்பாஷித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறிய புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றியம் டிரைவராக பணிபுரிந்து கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். அதனை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது நண்பர்களான திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அமீர், நஃபீன், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி, மஹதீர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 15 வீடுகளில் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இக்காமா பாஷா என்கிற சாதிக்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 40 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஒரு இக்காமா பாஷா என்கிற சாதிக் பாஷாவுடன் அல்பாஷித் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.