மேலும் அறிய

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதிகாலை தொடங்கிய சோதனை 

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனையில் ஈடுபட்டனர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

என்ஐஏ 

தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும். இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

மயிலாடுதுறை மாவட்டத்தில்15 குழுக்கள் சோதனை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில், ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சீர்காழி காவல்துறையினர் துணையுடன் 15 குழுக்களாக அதிகாரிகள் வருகை புரிந்து 15 வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஒருசில வீடுகளில் செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்தனர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

திருமுல்லைவாசல் - அல் பாஷித்

சென்னையில் கைது செய்யப்பட்ட அல் பாஷித்தின் நண்பர்கள், உறவினர்கள் என 15 வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாஷிதை 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமுல்லைவாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு மணி நேர விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள், சிடிகள், பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்குத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்று வந்தது.  


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

இந்நிலையில் அல்பாஷித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறிய புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றியம் டிரைவராக பணிபுரிந்து கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். அதனை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது நண்பர்களான திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அமீர், நஃபீன், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி, மஹதீர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 15 வீடுகளில் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இக்காமா பாஷா என்கிற சாதிக்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 40 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஒரு இக்காமா பாஷா என்கிற சாதிக் பாஷாவுடன் அல்பாஷித் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
Volvo EX30: ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
Embed widget