மேலும் அறிய

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதிகாலை தொடங்கிய சோதனை 

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனையில் ஈடுபட்டனர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

என்ஐஏ 

தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும். இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

மயிலாடுதுறை மாவட்டத்தில்15 குழுக்கள் சோதனை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில், ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சீர்காழி காவல்துறையினர் துணையுடன் 15 குழுக்களாக அதிகாரிகள் வருகை புரிந்து 15 வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஒருசில வீடுகளில் செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்தனர்.


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

திருமுல்லைவாசல் - அல் பாஷித்

சென்னையில் கைது செய்யப்பட்ட அல் பாஷித்தின் நண்பர்கள், உறவினர்கள் என 15 வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் கைது செய்யப்பட்ட அல்பாஷிதை 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமுல்லைவாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு மணி நேர விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள், சிடிகள், பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்குத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்று வந்தது.  


ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது - அவரது சொந்த ஊரான திருமுல்லைவாசலில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...!

இந்நிலையில் அல்பாஷித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறிய புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றியம் டிரைவராக பணிபுரிந்து கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். அதனை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது நண்பர்களான திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அமீர், நஃபீன், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி, மஹதீர் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 15 வீடுகளில் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இக்காமா பாஷா என்கிற சாதிக்

மயிலாடுதுறை மாவட்டம் நீடூரை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் இக்காமா பாஷா என்கிற 40 வயதான சாதிக் பாஷா. இவர் சென்னையில் இக்காமா என்னும் தற்காப்பு கலை பயிற்சி மையம் நடத்தி வருவதால் அதே பெயரில் பிரபலமானார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஒரு இக்காமா பாஷா என்கிற சாதிக் பாஷாவுடன் அல்பாஷித் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வாலிபர் ! பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம் ! சிக்கிய சிறுவர்கள்
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வாலிபர் ! பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம் ! சிக்கிய சிறுவர்கள்
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!
Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
Leema Rose Martin : ‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
MK Stalin Vs Vijay: “தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை, ஆனால்..“ ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?
“தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை, ஆனால்..“ ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?
ICAI: இனி சிஏ பாடத்தில் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம்; ஐசிஏஐ அதிரடி- இதுதான் காரணம்!
ICAI: இனி சிஏ பாடத்தில் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் அறிமுகம்; ஐசிஏஐ அதிரடி- இதுதான் காரணம்!
Thirumavalavan: ”எல்லாமே கிசுகிசுப்பு, முணுமுணுப்பு தான்..அதிகாரப்பூர்வமாக பேசவில்லை” - திருமாவளவன் விளக்கம்
Thirumavalavan: ”எல்லாமே கிசுகிசுப்பு, முணுமுணுப்பு தான்..அதிகாரப்பூர்வமாக பேசவில்லை” - திருமாவளவன் விளக்கம்
EPS vs SPV: இபிஎஸ்க்கு செக் வைத்த எஸ்பிவி டீம்.! அடுத்து நடக்கப்போவது என்ன.? காத்திருக்கும் ட்விஸ்ட்
இபிஎஸ்க்கு செக் வைத்த எஸ்பிவி டீம்.! அடுத்து நடக்கப்போவது என்ன.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Nexon Victoris Rivals: நெக்ஸானுகே கஷ்டம், இதுல விக்டோரிஸ் மாடலுக்குமா? டாடா, மாருதிக்கு போட்டியாக ஹோண்டாவின் கார்கள்
நெக்ஸானுகே கஷ்டம், இதுல விக்டோரிஸ் மாடலுக்குமா? டாடா, மாருதிக்கு போட்டியாக ஹோண்டாவின் கார்கள்
CM Vijay: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விஜய் ஆலோசனை
CM Vijay: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விஜய் ஆலோசனை
Embed widget