மேலும் அறிய

குக்கரில் காய்ச்சிய சாராயம்: விசிலுக்கு முன் வீதிக்கு வந்தது... பின்னாலே போலீசும் வந்தது!

‛நாங்க இரவு பகலெல்லாம் உழைக்கிறோம்... நீங்க நோகாம நுங்கு திங்கிறீங்க! டிசைன் டிசைனா சாராயம் காய்ச்சினால் நாங்க எங்கே போவோம்...’ என நொந்து கொண்டார்கள் போலீசார். 

மயிலாடுதுறை அருகே வீட்டில் சாராய ஊறல் தயாரித்த நபர் கைது. குக்கர் மூலம் தயாரிக்கப்பட்ட 200 லிட்டர் சாராய ஊறலை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். 


குக்கரில் காய்ச்சிய சாராயம்: விசிலுக்கு முன் வீதிக்கு வந்தது... பின்னாலே போலீசும் வந்தது!

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதிமுதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.  இதனால், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும் தங்களை மதுபோதையில் வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் டாஸ்மார்க் கடைகளை உடைத்து திருடுவதும், கள்ளச்சந்தையில் மது வாங்கி குடிப்பதும், தாங்களாக மது தயாரிக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். மது போதைக்காக இவர்கள் தயாரிக்கும் சாராயத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளும் நடந்த வண்ணம் உள்ளது.


குக்கரில் காய்ச்சிய சாராயம்: விசிலுக்கு முன் வீதிக்கு வந்தது... பின்னாலே போலீசும் வந்தது!

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடியில் அச்சகத்தில் வேலை பார்த்த பிரபு, அவரது நண்பர் செல்வம் ஆகியோர் ரசாயன பொருள்களில் சாராயம் தயாரித்து குடித்ததில் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரிடம் இருந்து சாராயம் வாங்கி குடித்த மேலும் 6 பேர் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


குக்கரில் காய்ச்சிய சாராயம்: விசிலுக்கு முன் வீதிக்கு வந்தது... பின்னாலே போலீசும் வந்தது!

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் போலீசார் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, வில்லியநல்லூரில் பாபு என்பவர் வீட்டில் இருந்து சாராய வாசனை வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை போலீசார் பாபு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 


குக்கரில் காய்ச்சிய சாராயம்: விசிலுக்கு முன் வீதிக்கு வந்தது... பின்னாலே போலீசும் வந்தது!

அப்போது 2 குக்கர்களில் வெல்லப்பாகு பயன்படுத்தி சாராய ஊறல் தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வீட்டில் இருந்த 200 லிட்டர் சாராய ஊரலை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து பாபுவை கைது செய்து குத்தாலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். குத்தாலம் போலீசார் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குக்கரில் 10 விசில் வைத்து குத்தாலத்தை கலக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு, கைவிளங்கு தான் கிடைத்தது. விசில் சத்தத்தை விட அதன் வாசம் வேகமாக வெளியே வந்ததும், தெரு முழுக்க சாராய வாடை பரவியதுமே போலீசார் அங்கு வர காரணமானது. ‛நாங்க இரவு பகலெல்லாம் உழைக்கிறோம்... நீங்க நோகாம நுங்கு திங்கிறீங்க! டிசைன் டிசைனா சாராயம் காய்ச்சினால் நாங்க எங்கே போவோம்...’ என நொந்து கொண்டார்கள் போலீசார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget