மேலும் அறிய

‛இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...’ டாஸ்மாக் கடை சுவர்களை பஞ்சராக்கி வரும் குடிமகன்கள்!

மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் லலிதா ஜீவல்லரி திருட்டு பாணியில் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் அள்ளிச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது. இதனால் பெரும்பாலான கடைகள் பஞ்சரான டியூப் போல ஓட்டை உடன் காணப்படுகின்றன.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இப்போது திறந்து விடுவார்கள், அப்போது திறந்து விடுவார்கள் என்ற மதுப்பிரியர்களின் கணிப்புகள் பொய்யாகி வருகின்றன. ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்படுவதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மது அருந்த முடியாததால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, தென்னை, பனை மரங்களில் கள் இறக்குவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுகின்றனர். அதேபோல ஆங்காங்கே எதற்கும் துணிந்த மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் லலிதா ஜீவல்லரி திருட்டு பாணியில் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் அள்ளிச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் பகுதியில் அரசு மதுபான கடையில், பின்பக்க சுவரில் துளையிட்டு கொள்ளை நடந்துள்ளது. துளை வழியாக கடைக்குள் நுழைந்த நபர்கள் விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதைக் கண்டு ரத்தனகிரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட மதுபானங்களின் மதிப்பு 2 லட்ச ரூபாய் மேல் இருக்கும் என கூறப்படுகிறது . இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


‛இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...’ டாஸ்மாக் கடை சுவர்களை பஞ்சராக்கி வரும் குடிமகன்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஷட்டரை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக அலங்கியம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் நேரில் சென்று பார்த்த போது, டாஸ்மாக் கடையின் ஷட்டரை கட்டிங் எந்திரம் மூலம் வெட்டி துளையிட்டுள்ளனர். அந்த துளையின் வழியே கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான 750 மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். மேலும் திருடர்கள் மதுபாட்டில்களுடன் டி.வி.ஆர் ரெக்கார்டரையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து முள் வேலியில் வீசப்பட்டு இருந்த டி.வி.ஆர் ரெக்கார்டரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


‛இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...’ டாஸ்மாக் கடை சுவர்களை பஞ்சராக்கி வரும் குடிமகன்கள்!

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் 27 ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. அக்கடையின் சுவரில் துளையிட்டும், முன் பக்க கதவின் பூட்டை உடைத்தும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபானக் கடைக்குள் நுழைந்தனர். 3 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் திருடி சென்றுள்ளனர். இதேபோல கடந்த 3 ம் தேதி கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின், பின்புற சுவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாறையால் இடித்து துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று ஒன்றரை இலட்ச ரூபாய் மதிப்பிலான 96 பீர் பாட்டில்கள் மற்றும் 800 குவாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட மதுபாட்டில்களை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் குடிக்கு அடிமையானவர்களும், அதிக விலைக்கு விற்று இலாபம் பார்க்க நினைப்பவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இத்தகைய செயல்கள் குறையும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget