மேலும் அறிய

Crime: கார் டிரைவருடன் கனெக்‌ஷன்.. காதலுக்கு தடையாக இருந்த கணவர்: கூலிப்படையை வைத்து கொலை செய்த பெண் எஸ்.எஸ்.ஐ!

கிருஷ்ணகிரி அருகே திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் 48 வயதான செந்தில் குமார். போலீஸ் ஏட்டுவாக பணியாற்றிய இவர், பணி காலத்தின்போது குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு 44 வயதான சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 19 வயதான ஜெகதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் மூவரும் ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாயார் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே மாயமான செந்தில்குமாரின் செல்போன், அவரது மகனின் செல்போன் இவர்களது கார் டிரைவர் 37 வயதான கமல்ராஜ் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை கடந்த 13 ம் தேதி விசாரணைக்கு அழைத்தனர். 

ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் கடந்த 14 ம் தேதி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள் செந்தில்கு மாரை கொலை செய்து தென் பெண்ணை ஆற்றில் உடலை வீசிவிட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பி ரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார். மேலும் சேலம் சிறையில் இருந்த ஜெகதீஷ்குமார், கார் டிரைவர் கமல் ராஜ் ஆகிய 2 பேரையும் போலீ சார் சேலம் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் குமாரின் உடலை நேற்று முன் தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ஜெகதீஷ்கு மார், கமல்ராஜ் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில்குமாரை அவரது மனைவி சித்ரா கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா என்கிற சரோஜா தேவி (37), கூலிப்படையை சேர்ந்த ஊத்தங்கரை பாரதிபுரம் விஜயகுமார் (21), தூத்துக்குடி மாவட்டம் மாங்குட்டைபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ பாண்டியன் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீ சார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாக்குமூலம்:

கைதான சித்ரா போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், ”எனது கணவர் செந்தில்குமார் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அத னால் ஏட்டுவாக இருந்த அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த 2008ல் ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் அவர் பணிபுரிந்த காலத்தில் நானும், அவரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கினோம்.

எனது கணவரிடம் கார் டிரைவராக கமல்ராஜ் என்பவர்வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. மேலும் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.

எனது கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கமல்ராஜ் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் அப்போது உல்லாசமாக இருந்து வந்தோம். இதையடுத்து கமல்ராஜ் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றது எனது கணவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் எங்களை கண்டித்தார். ஒருநாள் எனது கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது நான் கமல் ராஜூடன் தனிமையில் இருந்தேன்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தார். அதன் பிறகு அவருக்கும், கமல்ராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கமல்ராஜ் கொடுத்த புகாரில் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தார். இதன் பிறகு அவர் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வார்.

கூலிப்படை வைத்து கொலை:

எனக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்ததால் பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். எனது பிரச்சினைகளை கேட்ட அவர், என்னிடம் கூலிப்படை உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்டி விடலாம். யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.

இதையடுத்து நான் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம் சாமியார் கொடுத்தார். அப்போது நான், எனது கணவரின் கதையை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று கூறினேன்.

கிணற்றில் போட்டோம் அதன்படி சம்பவத்தன்று செந்தில்குமாரை கொன்று எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டு கிணற்றில் போட்டோம்.

இதனால் போலீசார் எனது கணவர் மாயமான வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணை தீவிரமடைந்ததால் என் மீது சந்தேகம் வராமல் இருக்க எனது கள்ளக்காதலன் மற்றும் எனது மகனை கோர்ட்டில் சரண் அடைய சொன்னேன். அதன்படி அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் போலீசார் எங்கள் அனைவரின் செல்போன் உரையாடல்கள், நாங் கள் யாருடன் எல்லாம் பேசி உள்ளோம் என்பதை ஆராய்ந்து முதலில் பெண் சாமியார் சரோஜாவை கைது செய்தனர். அவர் நடந்த சம்பவங்களை கூறிய தால் நாங்களும் மாட்டிக் கொண்டோம்” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget