மேலும் அறிய

திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..

ரூபி சரண்ஜித்திடம் அவரது தகாத உறவு பற்றி கேட்கையில், ​​வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதனால் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது மனைவியைக் கொன்றிருக்கிறார்.

கரார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தகாத உறவு வைத்திருந்தை கண்டுபிடித்த தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை சண்டிகர் மாநிலத்தில் மொரிண்டா அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளார். கணவர் திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்ததை மனைவி தெரிந்துகொண்டதால் அவரை கொலை செய்திருக்கிறார் என்று கைது செய்த போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் கரார் மாவட்டத்தின் பல்லோமஜ்ராவில் வசிக்கும் சரஞ்சித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ரூபி பாண்டே என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.

திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..

பாதிக்கபட்ட ரூபி பாண்டே, தனது கணவர் சரண்ஜித் மற்றும் ஒரு வயது மகனுடன் காரரில் உள்ள ஈகோ ஃப்ளோர்ஸ் 1 சொசைட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சண்டிகரில் உள்ள செக்டார் 45 ஐச் சேர்ந்த ரூபி பாண்டே மார்ச் 9 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. காரார் காவல் நிலையப் பொறுப்பாளர் சதீந்தர் சிங் கூறுகையில், "ரூபியின் சகோதரி சமீபத்தில் ரூபி காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார், அதைத் தொடர்ந்து சரண்ஜித் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்." என்று கூறியிருக்கிறார்.

சரண்ஜித் விசாரணையில், லூதியானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதை மனைவி தெரிந்துகொண்டார், அதனால் தனது மனைவியைக் கொன்றேன், என ஒப்புக்கொண்டார். மார்ச் 9 அன்று, ரூபி சரண்ஜித்திடம் அவரது தகாத உறவு பற்றி கேட்கையில், ​​வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதனால் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது மனைவியைக் கொன்றிருக்கிறார். கொலை செய்த பின்னர், உடலை மறைத்து செய்த குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளார். எனவே அவர் மொரிண்டாவுக்குச் சென்று அவரது மனைவியின் உடலை கான்ட் மான்பூர் கால்வாயில் வீசி உள்ளார்.

திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..

பலியானவரின் உடலைக் கண்டுபிடிக்க கால்வாயில் குதித்ததுதான் தேட வேண்டும் என்கிற சூழ்நிலை உருவானதும், சண்டிகர் போலீசார் நீச்சல் வீரர்களை இதற்காக பிரத்யேகமாக அழைத்து வந்து தேடியுள்ளனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலைக் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். சரண்ஜித் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (இபிகோ) 302 (கொலைக் குற்றம்), 120-பி (குற்றச் சதி) மற்றும் 201 (குற்றச் சான்றுகளை காணாமல் போகச் செய்தது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தனது சுயநலத்திற்காக மனைவியை கொள்ள நினைத்த சரண்ஜித்திற்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget