மேலும் அறிய

திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..

ரூபி சரண்ஜித்திடம் அவரது தகாத உறவு பற்றி கேட்கையில், ​​வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதனால் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது மனைவியைக் கொன்றிருக்கிறார்.

கரார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தகாத உறவு வைத்திருந்தை கண்டுபிடித்த தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை சண்டிகர் மாநிலத்தில் மொரிண்டா அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளார். கணவர் திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்ததை மனைவி தெரிந்துகொண்டதால் அவரை கொலை செய்திருக்கிறார் என்று கைது செய்த போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் கரார் மாவட்டத்தின் பல்லோமஜ்ராவில் வசிக்கும் சரஞ்சித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ரூபி பாண்டே என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.

திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..

பாதிக்கபட்ட ரூபி பாண்டே, தனது கணவர் சரண்ஜித் மற்றும் ஒரு வயது மகனுடன் காரரில் உள்ள ஈகோ ஃப்ளோர்ஸ் 1 சொசைட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சண்டிகரில் உள்ள செக்டார் 45 ஐச் சேர்ந்த ரூபி பாண்டே மார்ச் 9 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. காரார் காவல் நிலையப் பொறுப்பாளர் சதீந்தர் சிங் கூறுகையில், "ரூபியின் சகோதரி சமீபத்தில் ரூபி காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார், அதைத் தொடர்ந்து சரண்ஜித் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்." என்று கூறியிருக்கிறார்.

சரண்ஜித் விசாரணையில், லூதியானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதை மனைவி தெரிந்துகொண்டார், அதனால் தனது மனைவியைக் கொன்றேன், என ஒப்புக்கொண்டார். மார்ச் 9 அன்று, ரூபி சரண்ஜித்திடம் அவரது தகாத உறவு பற்றி கேட்கையில், ​​வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதனால் அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது மனைவியைக் கொன்றிருக்கிறார். கொலை செய்த பின்னர், உடலை மறைத்து செய்த குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்துள்ளார். எனவே அவர் மொரிண்டாவுக்குச் சென்று அவரது மனைவியின் உடலை கான்ட் மான்பூர் கால்வாயில் வீசி உள்ளார்.

திருமணத்தை மீறிய தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. அதிகரிக்கும் குடும்ப வன்முறை..

பலியானவரின் உடலைக் கண்டுபிடிக்க கால்வாயில் குதித்ததுதான் தேட வேண்டும் என்கிற சூழ்நிலை உருவானதும், சண்டிகர் போலீசார் நீச்சல் வீரர்களை இதற்காக பிரத்யேகமாக அழைத்து வந்து தேடியுள்ளனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலைக் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். சரண்ஜித் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (இபிகோ) 302 (கொலைக் குற்றம்), 120-பி (குற்றச் சதி) மற்றும் 201 (குற்றச் சான்றுகளை காணாமல் போகச் செய்தது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தனது சுயநலத்திற்காக மனைவியை கொள்ள நினைத்த சரண்ஜித்திற்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
கல்லூரி மாணவி குளிப்பதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்
கல்லூரி மாணவி குளிப்பதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்
" அப்பாகிட்ட சொல்லாத " கள்ளக் காதலனுடன் சினிமாவுக்கு சென்ற தாய் - போட்டுக் கொடுத்த மகள்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து.! திமுக, தவெகவை வெளுத்தி வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்-
இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து.! திமுக, தவெகவை வெளுத்தி வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்-
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
Embed widget