மேலும் அறிய

Karnataka: கர்நாடகாவில் இஸ்லாமியர் அடித்து கொலை..குற்றவாளிகள் தப்பியோட்டம்.. என்ன நடந்தது?

Karnataka Cow Vigilantes kill Man: வியாபாரி ஒருவர் பசு பாதுகாவலர்கள் என கூறப்படும் நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மாடுகளை கொண்டு சென்றதற்காக, இஸ்லாமியர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் என்று கூறி கொள்பவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் கொலை:

கர்நாடகாவில் நேற்றைக்கு முந்தைய நாள் ( சனிக்கிழமை ) கால்நடை வியாபாரி இட்ரிஸ் பாசா என்பவர் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அப்போது பசு பாதுகாவலர்கள் கூறி கொள்ளும் நபர்களான புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள், இட்ரிஸ் பாஷா சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மாடு ஏற்றிச் சென்றது தொடர்பாக கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு இட்ரிஸ் பாசா,  கால்நடை சந்தையில் இருந்து பெற்ற ஆவணங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. 

அதை ஏற்க மறுத்த புனீத் கேரேஹள்ளி கூட்டத்தினர், பாசாவிடம் 2 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2 லட்சம் ரூபாயை பாசா தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த புனீத் கூட்டத்தினர், பாசாவை தாக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இட்ரிஸ் பாசாவின் உடல் கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாலையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. 


Karnataka: கர்நாடகாவில் இஸ்லாமியர் அடித்து கொலை..குற்றவாளிகள் தப்பியோட்டம்.. என்ன நடந்தது?

வழக்குப்பதிவு:

இதையடுத்து, குற்றவாளிகளாக அறியப்படும் புனீத் கேரேஹள்ளி மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர். சம்பவத்தை அறிந்த உறவினர்கள், இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று (ஏப்ரல் 1) இறந்தவரின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது, மேலும் இத்ரீஸின் மர்ம மரணத்திற்கு காரணமான பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து, காவல்துறையினர் தலையீட்டை தொடர்ந்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கேரேஹள்ளி உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: Bihar Violence: ராம நவமி வன்முறையால் 144 தடை உத்தரவு: 106 பேர் கைது; பீகாரில் என்ன நடக்கிறது?

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
Embed widget