மேலும் அறிய

"பணத்தை திருப்பி தர மாட்டியா" : கொடூர கொலை.. சிக்கிய பெண்.. மூவர் கைது.. நடந்தது என்ன ?

Kanchipuram Murder : காஞ்சிபுரம் உத்திரமேரூரில் கொடுத்த பணத்தை திருப்பி தராததால் ரயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார் 

கொடுத்த பணத்தை திருப்பி தராததால் ரயில்வே ஊழியரை கொலை செய்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பியோடிய ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

அடையாளம் தெரியாத உடல் 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே கடந்த மாதம் 29-ஆம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று சாலை ஓரத்தில் தலையிலும், கழுத்திலும் ரத்த காயங்களுடன் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைப் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் இது கொலை என்பது தெரிய வந்தது.

வழக்கு பதிவு செய்து விசாரணை

அந்த அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கார்த்திக் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில் வெளியான தகவல்

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பெரிய மேலமையூர், மாதா கோவில் தெருவை சேர்ந்த பாபி என்கின்ற பாபு மகன் ரமேஷ் வயது 47, இவர் ரயில்வே துறையில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். 

ரமேஷ் செங்கல்பட்டு, நத்தம், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவரது மனைவி தமிழ் செல்வியிடம் சுமார் 13 லட்ச ரூபாய் கடனாக பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ரமேஷ் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரமேஷை கடத்திய கார்த்திக்

இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வந்துள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவரது கூட்டாளியான ஸ்ரீநாத் மற்றும் செங்கல்பட்டு பெரிய நத்தத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகன் சிவா என்கின்ற நொண்டி சிவா வயது 35, கார்த்திக் மனைவி தமிழ்ச்செல்வி வயது 27 ஆகியோர் ரமேஷை கடத்திக் கொண்டு சென்று அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் பயந்து போன ரமேஷ் தனது மனைவி உத்திரமேரூரில் இருப்பதாகவும் அவரிடம் பணம் இருக்கிறது வாங்கித் தருகிறேன் . என்னை விட்டு விடுங்கள் என்று கூறி கெஞ்சியுள்ளார், உடனே ரமேஷை அழைத்துக் கொண்டு உத்திரமேரூர் வந்துள்ளனர்.

கொடூர கொலை

உத்திரமேரூர் வந்த பிறகு எனது மனைவி காஞ்சிபுரத்தில் இருக்கிறார் என்று ரமேஷ் கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர் இதில் ரமேஷ் சுயநலையில்லாமல் சரிந்து விழுந்துள்ளார். உடனே அவர் தலையில் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்து மருத்துவன்பாடி கூட்டுச்சாலையில், அவரது உடலை வீசி சென்றது போலீஸாரின் விசாரணை தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்ரீநாத் தலைமறைவாக உள்ள நிலையில் கார்த்திக் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் சிவா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வாங்கிய கடனை திருப்பித் தராத ரயில்வே ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Embed widget