மேலும் அறிய

"பணத்தை திருப்பி தர மாட்டியா" : கொடூர கொலை.. சிக்கிய பெண்.. மூவர் கைது.. நடந்தது என்ன ?

Kanchipuram Murder : காஞ்சிபுரம் உத்திரமேரூரில் கொடுத்த பணத்தை திருப்பி தராததால் ரயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார் 

கொடுத்த பணத்தை திருப்பி தராததால் ரயில்வே ஊழியரை கொலை செய்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தப்பியோடிய ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

அடையாளம் தெரியாத உடல் 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே கடந்த மாதம் 29-ஆம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று சாலை ஓரத்தில் தலையிலும், கழுத்திலும் ரத்த காயங்களுடன் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைப் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் இது கொலை என்பது தெரிய வந்தது.

வழக்கு பதிவு செய்து விசாரணை

அந்த அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கார்த்திக் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில் வெளியான தகவல்

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பெரிய மேலமையூர், மாதா கோவில் தெருவை சேர்ந்த பாபி என்கின்ற பாபு மகன் ரமேஷ் வயது 47, இவர் ரயில்வே துறையில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். 

ரமேஷ் செங்கல்பட்டு, நத்தம், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவரது மனைவி தமிழ் செல்வியிடம் சுமார் 13 லட்ச ரூபாய் கடனாக பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ரமேஷ் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரமேஷை கடத்திய கார்த்திக்

இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வந்துள்ளது, இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவரது கூட்டாளியான ஸ்ரீநாத் மற்றும் செங்கல்பட்டு பெரிய நத்தத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகன் சிவா என்கின்ற நொண்டி சிவா வயது 35, கார்த்திக் மனைவி தமிழ்ச்செல்வி வயது 27 ஆகியோர் ரமேஷை கடத்திக் கொண்டு சென்று அவரை தாக்கியுள்ளனர்.

இதனால் பயந்து போன ரமேஷ் தனது மனைவி உத்திரமேரூரில் இருப்பதாகவும் அவரிடம் பணம் இருக்கிறது வாங்கித் தருகிறேன் . என்னை விட்டு விடுங்கள் என்று கூறி கெஞ்சியுள்ளார், உடனே ரமேஷை அழைத்துக் கொண்டு உத்திரமேரூர் வந்துள்ளனர்.

கொடூர கொலை

உத்திரமேரூர் வந்த பிறகு எனது மனைவி காஞ்சிபுரத்தில் இருக்கிறார் என்று ரமேஷ் கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர் இதில் ரமேஷ் சுயநலையில்லாமல் சரிந்து விழுந்துள்ளார். உடனே அவர் தலையில் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்து மருத்துவன்பாடி கூட்டுச்சாலையில், அவரது உடலை வீசி சென்றது போலீஸாரின் விசாரணை தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்ரீநாத் தலைமறைவாக உள்ள நிலையில் கார்த்திக் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் சிவா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வாங்கிய கடனை திருப்பித் தராத ரயில்வே ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget