மேலும் அறிய

’போன் செய்தால் டோர் டெலிவரி’ வீடு தேடி வரும் சாராயம்...!

சாராயங்களை பாக்கெட்டுகளாகவும், பாட்டில்களாகவும் டோர் டெலிவரி செய்யும் நபர்களை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் காவல்துறை, கண்டுக்கொண்டேன், கண்டுக்கொண்டேன் என கைது செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவே கொரோனா பயத்தில் இருக்கும்போது, சாராயம் காய்ச்சுவது, காய்ச்சிய சாராயத்தை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்வது என ஏக பிசியாக இருக்கிறது திருவண்ணாமலை மாவட்டம். வானபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் உள்ள குடிமகன்கள் தொலைபேசியில் அழைத்து சொன்னால்போதும், உணவு டெலிவரி செய்வதுபோல், வீடு தேடி வந்து சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது.

’போன் செய்தால் டோர் டெலிவரி’ வீடு தேடி வரும் சாராயம்...!
 
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்து ஆசாமிகளோ பக்கத்து மாநிலமான கர்நாடாகவிற்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி, சில போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டும், சில போலீசின் கைகளில் காசை அமுக்கிவிட்டும், திருவண்ணாமலையில் வந்து அதனை விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமா, இந்த ஊரடங்கை பயன்படுத்தி சிலர் ஊரல் போட்டு சாராயமே காய்ச்சி வருகின்றனர். காய்ச்சும் சாராயத்தை பாக்கெட்டுகளில் தண்ணீர் பொட்டலங்கள் போல் அடைத்து, வீட்டிற்கே சென்று டோர் டெலிவரியும் செய்கின்றனர்.
 
திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைகோடி எல்லையாக இருக்கும்  வானபுரம், வெறையூர், தச்சம்பட்டு போன்ற ஊர்களில் வனப்பகுதிகள் மற்றும் மலைகிராமங்கள்  அதிகமாக உள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி, மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி, ஊரடங்கால் வெளியில் வரமுடியாதவர்களுக்கு பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் அடைத்து,  வீட்டிற்கே சென்று சப்ளை செய்து வருகின்றனர். ஒரு போன் செய்தால் போதும், ஒரு சில நிமிடங்களில் சாராய பாக்கெட்டுகள் வீட்டிற்கு சென்றும்விடும் அளவிற்கு காற்றைவிட வேகமாக கனன்று சுழன்று விற்பனை செய்கிறார்கள்.
 
அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இதனை காவல்நிலையத்திற்கு சொன்னாலும், இதுவரை யாரும் இதனை கண்டுக்கொள்ளவில்லையாம். கண்டுகொள்ளும் அளவிற்கு யாராவது புகார் கொடுத்தால், கன்னம் ரெண்டும் பழுத்துவிடும் அளவிற்கு அடி விழும் என்பதால் பலரும் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.  கொரோனா ஒரு பக்கம் உயிர்களை கொன்றுகுவித்து வரும் நிலையில், இதுபோன்ற கள்ளச்சாரயத்தினால் மீண்டும் தமிழ்நாட்டில் பலர் உயிரிழக்க நேரிடும், பலருக்கு பார்வையிழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சும் சமூக ஆர்வலர்கள், உடனடியாக இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
 
டாஸ்மாக் மதுபான கடைகள் இல்லாததால், குடிக்காமல் இருக்க முடியாமல் இருக்கும் ’குடி’ மகன்களின் பலவீனத்தை பயன்படுத்தி, இதுபோன்று பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வரையில் சாராயம் சன்னமாக விற்கப்பட்டு வருகிறது. இப்படி விற்கப்படும் சாராயங்களால் பலனடையும் பலர், நாளடைவில் இன்னும் தீவிரமான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், கண்டுக்கொள்ளாமல் இருக்கும் காவல்துறை கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் என கைது செய்ய வேண்டும்.
 
 
 

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget