மேலும் அறிய

Crime: திருமணத்தை மீறிய காதல் ஜோடி தற்கொலை.. இறந்தது தெரியாமல் தூங்கிய குழந்தைகள்..! கன்னியாகுமரியில் நடந்தது என்ன..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் மவுண்ட்டில் நேற்று காலையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர்.

நாகர்கோவிலில் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த ஜோடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மரணம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் மவுண்ட்டில் நேற்று காலையில் ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களுக்கு அருகில் ஒரு சொகுசு கார் நின்றது. இதுபற்றி தகவலறிந்த ஆரல் வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

இதன்பிறகு அருகில் இருந்த சொகுசு காரை சென்று பார்த்தபோது அதில் 2 குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். இதனையடுத்து இறந்த வாலிபரின் உடலை சோதனையிட்ட போது அதில் ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியபோது, இறந்து கிடந்தவர் கடியப்பட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த  இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ஷாமினி (30) என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது.

திருமணத்தை மீறிய உறவு:

இதுகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது ஆரோக்கிய சூசைநாதன், ஷாமினி இருவரும் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த நிலையில் , அவர்கள் ஆரல்வாய்மொழி வந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திய ஆரோக்கிய சூசைநாதனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். 

இதற்கிடையில் தான்  ஆரோக்கிய சூசைநாதனுக்கு  தன் வீட்டின் அருகில் வசித்த ஷாமினியுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவு  இருந்துள்ளது. இதுபற்றி ஷாமினியின் கணவர் ராஜேஷிடம் பலரும் தெரிவித்த நிலையில், அவர் தன் மனைவி மீது எவ்வித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கையோடு இருந்துள்ளார். இதனிடையே தான் ஷாமினி ஆரோக்கிய சூசை நாதனுடன் சேர்ந்து வாழ எண்ணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்பின்னரே அனைவரும் ஷாமினி குறித்து சொன்னது உண்மை என ராஜேஷூக்கு தெரிய வந்தது. 

பின்னர் சில நாட்கள் கழித்து ஷாமினி மீண்டும் தன் கணவர் ராஜேஷை தேடி வந்துள்ளார். இந்நிலையில் தான், வந்தவர் மீண்டும் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இம்முறை தனது இரு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.  இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், போலீசார் ஷாமினி மற்றும் குழந்தைகளை தேடி வந்தனர். 

தற்கொலை:

இந்நிலையில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து ஆரோக்கிய சூசை நாதன், ஷாமினி தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன் பல இடங்களுக்கு சென்ற இவர்கள் தங்கள் காதலை யாரும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே என நினைத்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget