மேலும் அறிய

Crime: செலவுக்கு பணம் கொடுக்காததால் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்

வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாங்க் புத்தகம் மற்றும் ஆவணங்களை எடுத்து வைத்துக் கொண்டதால் ஆத்திரமடைந்து கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாட்டை சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் விஸ்வநாதன் (46). இவரது அக்கா சுந்தராம்பாள் (65). அவரது வீட்டுக்காரர் பாலசுப்பிரமணியன். விஸ்வநாதன் தனது அக்கா மகள் தனலட்சுமியையே திருமணம் செய்துள்ளார்.

தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு விஸ்வநாதன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் இதை கூறி வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லையாம். இதுகுறித்து தனலட்சுமி தனது அம்மா சுந்தராம்பாளிடம் கூறி வேதனைப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் தீபாவளியன்று தென்னந்தோப்பிலிருந்து வரும் வருமானத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி தனலட்சுமியும், சுந்தராம்பாளும் வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்களை எடுத்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் வங்கி புத்தகம் மற்றும் ஆவணங்களை கேட்டு தனது அக்கா சுந்தராம்பாள் மற்றும் தனலட்சுமியிடம் பிரச்னை செய்துள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் விஸ்வநாதன் கட்டையால் தனது அக்கா மற்றும் மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதில் தனது மாப்பிள்ளைக்கு ஆதரவாக பாலசுப்பிரமணியன் செயல்பட்டுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி மற்றும் சுந்தராம்பாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி நேற்று இறந்தார். சுந்தரம்பாள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் சுந்தராம்பாளிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை தேடி வந்தனர். பின்னர் அவர் மறைந்திருந்த இடம் பற்றி தெரிய வந்த நிலையில் விரைந்து சென்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருதரப்பினர் மோதல் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி சால்வன்பேட்டை காலனி தெருவில் ஒரு வீட்டாருக்கும், ஊர் மக்களுக்கும் கோவில் கட்டுவதில் இடப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீரமணி மகன் வடிவழகன் குளிக்க மோட்டார் செட்டிற்கு செல்லும் பொழுது முன் விரோதம் காரணமாக அவரை அரிவாள் மற்றும் கட்டை, கற்களால் சிலர் தாக்கியுள்ளனர்.


Crime: செலவுக்கு பணம் கொடுக்காததால் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவர்

இதில் படுகாயம் அடைந்த வடிவழகன் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வடிவழகன் தாயார் சசிகலா தோகூர் போலீசில் புகார் செய்தார். அதில் காலனி தெருவை சேர்ந்த மதியழகன் மகன்கள் சூர்யா, ராஜராஜன், பாரதி, ராசு, அவரது மகன் ரஞ்சித், மதியழகன், சரத்குமார், கோபி ஆகியோர் தாக்கியதில் தனது மகன் காயம் அடைந்தார் என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் தோகூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப் இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோபி, சரத்குமார், பாரதி ஆகியோரை கைது செய்தனர்.

அதுபோல ராசு மனைவி செல்வி கொடுத்த புகாரின் பெயரில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், வடிவழகன், அஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


தலைப்பு செய்திகள்

நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget