மேலும் அறிய

பள்ளிகொண்டா அருகே ரூ.10 கோடி பறிமுதல்; 4 பேர் கைது - ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணம். நான்கு பேரை கைது செய்த காவல்துறை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணம். நான்கு பேரை கைது செய்த காவல்துறை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தின் வழியாக சென்னை, திருவண்ணாமலை, ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர். மேலும், வழிபறியிலும் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகன சோதனைகளிலும் , ரோந்து பணிகளிலும் அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணியின் போது மட்டும் வேலூர் பகுதியில் மட்டும் 4 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 


பள்ளிகொண்டா அருகே ரூ.10 கோடி பறிமுதல்;  4  பேர் கைது - ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

 

அதனைத் தொடர்ந்து வேலூர் அடுத்த பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஆட்கள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக காரின் அருகே சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருந்த 4 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பண்டலை பிரித்து பார்த்தபோது அதில் பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கு உரிய ஆவணம் கேட்டனர். அதற்கு ஆவணம் இல்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆவணம் எதுவும் இல்லாததால் பண்டல் மூலம் லாரியில் ஏற்ற முயன்ற சுமார் 10 கோடி ரூபாய் பணத்தையும் காரையும், லாரியையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 நபர்களையும் கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் பணத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


பள்ளிகொண்டா அருகே ரூ.10 கோடி பறிமுதல்;  4  பேர் கைது - ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

பிடிப்பட்ட நபர்கள் பணத்தை கேரளாவிற்கு கடத்த இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணண் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்பாக வேலூர் வருமான வரி துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. பிடிபட்ட பணம் ஹவாலா பணமா என்றும் காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget