மேலும் அறிய

Atrocities On Dalits: தொடரும் சாதீயம்! பட்டியலின இளைஞரை தாக்கி சிறுநீர் கழித்த கொடூரம் - 6 பேர் கும்பல் அட்டூழியம்!

ஆந்திராவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Atrocities On Dalits: ஆந்திராவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இளைஞரை கொடூரமாக தாக்கி சிறுநீர்  கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதிய வன்மங்கள்:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்நிலையில், தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

என்ன நடந்தது? 

ஆந்திர மாநிலம் கஞ்சிகச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்.  இவருக்கு ஹரிஷ் ரெட்டி என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஷியாம் குமாரை வெளியே செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.  இவரை சிவசாய் க்ஷேத்ரா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஹரிஷ் ரெட்டியின் நண்பர் 5 நண்பர்கள் இருந்தனர். இவர்கள் ஷியாம் குமாரை வலுக்கட்டயமாக காரில் ஏற்றியுள்ளார். பின்னர், அவரை குண்டூருக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், ஷியாம் குமாலை காரில் வைத்து கொடூரமாக அடித்துள்ளதாக தெரிகிறது. குண்டூர் வரும் வரை அவரை 6 பேர்  கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளனர். பின்னர்,  குண்டூர் வந்தவுடன் அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு அடித்துள்ளனர். இதனை அடுத்து, ஷியாம் குமார் தண்ணீர் கேட்டபோது அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். சுமார் 4 மணி நேரம் அவரை பிடித்து வைத்து தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் எற்ப்ட்டது. 

6 பேர் கைது:

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பின்னர், பாதிக்கப்பட்ட நபரை  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”கஞ்சிகச்சேர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவரை 6 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சுமார் நான்கு மணி நேரம் தாக்கியுள்ளனர். மேலும், அவர் தண்ணீர் கேட்டதற்கு அவரது முகத்தில் சிறுநீர் கழித்துள்ளனர். அவர்கள் ஆறு பேர் மீது ஜாமீனில் வராதப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக அவர் தாக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.


மேலும் படிக்க

PTR Speech: நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இருந்த நிதி நெருக்கடி தற்போதும் இருக்கிறது - அமைச்சர் பி.டி.ஆர். பேச்சு

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
ஹேர்கட் பண்ண லேட்டானா அடிப்பீங்களா? - சலூன் கடை உரிமையாளரை வெளுத்து வாங்கும் கொடூர வீடியோ
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை என ஏமாற்றி ரூ.26 லட்சம் சுருட்டிய பெண்: கடலூரில் அரங்கேறிய கொடூர மோசடி!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi TVK: ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்துட்டோம்..! உதயநிதி பேச்சு - ஸ்டிக்கர் பாய்ஸ் என தவெக பதிலடி
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Embed widget