மேலும் அறிய

Watch Video : தொடரும் சுங்கச்சாவடி அத்துமீறல்: தன்னார்வலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!

சுங்கச்சாவடியில் நடக்கும் தாக்குதல்கள், குண்டர்கள் மற்றும் ரவுடிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதலைப் போன்ற ஒவ்வொரு முறையும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடி என்கிற பெயரில் ரவுடியிசம் நடப்பது, அவ்வப்போது நடைபெறும் கசப்பான சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது. அந்த வகையில், கருணை உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்க அவர்களது வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவர்களது மீட்பு வாகனத்திற்கு சுங்கம் செலுத்த கூறியுள்ளனர். தங்களின் சமூகப்பணி குறித்து கூறி, தங்களது வாகனத்திற்கு வழிவிடுமாறு அவர்கள் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், அமைப்பினர் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட வாகனத்தில் சென்ற அறக்கட்டளையை சேர்ந்த யுவஸ்ரீ என்பவர் தனது முகநூலில் அந்த சம்பவம் குறித்து வீடியோ உடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

Watch Video : தொடரும் சுங்கச்சாவடி அத்துமீறல்: தன்னார்வலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!
 
‛‛மாற்றத்தை நோக்கிய பாதையில் ஆதிக்கத்தை எதிர்த்துபோராட வேண்டிய சூழல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியாக நேற்றைய தினம்(20/2/22) ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்ப்பதற்காக கருணை உள்ளங்கள் அறக்கட்டளை சேர்ந்த யுவஸ்ரீ(நான்), சிவதர்ஷினி என்று இரண்டு பெண் தன்னார்வளர்களும் அப்பாஸ், சுரேந்தர், மருது என்ற ஆண் தன்னார்வளர்களும் சென்று சேர்த்துவிட்டு திரும்புகையில் மணி நள்ளிரவு பண்ணிரெண்டு ஆகியிருந்தது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு வருகையில் சரியாக நள்ளிரவு 12.10 மணி இருக்கும். நாங்கள் இதுவரை எண்ணூறுக்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்தும் ஆதரவற்று சாலையோரம் இருக்கும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரையும் மீட்டு காப்பகங்களில் சேர்த்தும் சமுக பணியாற்றி வருகிறோம். இந்த சூழலில் நேற்று நாங்கள் திரும்பி வருகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அங்கு பணிபுரிபவர்கள் வழி மறைக்க எங்களது வாகனம் Emergency rescue van எங்களது சமூக பணி குறித்தும் நாங்கள் எங்களது தனிப்பட்ட வேலைக்காகவும் செல்லவில்லை ஆதரவற்ற ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சேர்ப்பதற்காகவே சென்றோம் என கூறியும் அவர்கள் பணம் கொடுத்துவிட்டுதான் செல்லவேண்டும் என கூறினார்கள். சரி உங்களது மேலதிகாரியிடம் பேசிக்கொள்கிறோம் என வண்டியை திருப்பி அலுவலகத்தை நோக்கி வருகையில் அந்த சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஒருவர் எங்களது வாகனத்தின் கண்ணாடியினை கைகளால் ஓங்கி தட்டி உடைக்க முயன்றார். உடனே நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி பேசுவதற்காகதானே வந்தோம் என கூறுவதற்குள் எங்களோடு வந்த மூன்று தன்னார்வளர்களையும் ஒரு பதினைந்திற்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்து அடித்து அலுவலகத்திற்குள் அழைத்து சென்றுவிட்டார்கள் நாங்கள் இரு பெண் தன்னார்வளர்களும் இந்த நிகழ்வின்போதெல்லாம் அங்குதான் இருக்கிறோம் அப்பொழுது நாங்கள் எடுத்த வீடியோவை இங்கு பகிர்கிறோம். சமூக ஆர்வலருக்கு இங்கு இப்படியான மரியாதைதான் கொடுக்கப்படுகிறது. இதை எல்லோரும் எல்லோருக்கும் பகிருங்கள். ஆதிக்க வர்க்கமோ அநீதியோ இது இரண்டிற்கும் எதிரான போராட்டம் எப்போதும் தொடரும் அதில் மாற்றமில்லை. அதன் பிறகு அருகிலிருந்த போக்குவரத்து காவலர்களை வரவழைத்தோம் அவர்கள் வந்து பேசியபிறகு எங்கள் தன்னார்வளர்களை அடித்த சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் பிறகு அங்கிருந்து நாங்கள் கிளம்பிவிட்டோம்.அதன்பிறகு எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி ஒரு சமூக சேவை செய்பவருக்கு இங்கு கொடுக்கப்படும் மரியாதை இதுதானா? இந்த சமுகம் சேவை செய்பவரை தெய்வமாக பார்க்க வேண்டாம் ஆனால் சாதாரண மனிதனாகவாவது மதிக்கலாம் அல்லவா....இப்படி ஒரு அமைப்பு வைத்து சமுக பணி செய்பவர்களுக்கே ஆதிக்கவர்கத்தினால் இந்த நிலை என்றால் ஒரு சாமானிய மனிதனோட நிலை என்ன என்ற கேள்விக்கான பதிலும் தேட வேண்டியிருக்கிறது. இதற்காகவெல்லாம் எங்கள் பணி தடைபடபோவதில்லை இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட ஒரு ஆதரவற்ற முதியவரை மீட்கதான் சென்றுகொண்டிருக்கிறேன். ஆதிக்க வர்க்கத்திற்கும் கொஞ்சமும் மனிதமற்றவர்களுக்கும் எதிரா எற் எதிர்ப்பினை எழுத்தின் மூலம் பதிவு செய்துவிட்டேன். நீங்கள் இதை பகிர்வதற்மூலம் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். இது நிச்சயம் முதல்வர் முதல்வர் கவனத்திற்கு மற்றும் உயரதிகாரிகள் கவனத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது அனைவரும் பகிரவும்,’’ என்று அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளார்.
சுங்க ஊழியர்கள் தாக்கும் வீடியோ இதோ...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
Embed widget