மேலும் அறிய

Crime: டெல்லியை நடுங்க வைத்த சம்பவம்... பெண் வழக்கறிஞர் கொடூர கொலை... பதுங்கிய கணவர்.. என்ன நடந்தது?

டெல்லியில் பெண் வழக்கறிஞரை அவரது கணவரே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: தலைநகர் டெல்லியில் பெண் வழக்கறிஞரை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை நடுங்க வைக்கும் கொலைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. சமீபத்தில் கூட நடுரோட்டில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெண் வழக்கறிஞர் கொலை:

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ரேனு ஷின்கா (61). இவர் தனது கணவருடன் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவரான அஜய் நாத்  இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி என்று கூட பார்க்காமல் அஜய் நாத், மனைவி ரேனு சின்காவை கொலை செய்துள்ளார். கொலை செய்து மனைவி ரேனு சின்காவின் உடலை பாத்ரூமிலேயே மறைத்து வைத்திருக்கிறார். 

அப்போது, சம்பவத்தன்று மாலை ரேனு சின்காவின் சகோதரர் அவருக்கு வழக்கம் போல் போன் செய்துள்ளார். ஆனால் ரேனு சின்கா அவரது அழைப்பை எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ரேனு சின்காவின் சகோதரர் சம்பவத்தன்று மாலை 3.15 மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். ஆனால் யாரும் கதவை திறக்காதால் சந்தேகமடைந்த ரேனு சின்காவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

என்ன காரணம்?

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரேனு சின்கா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு ரத்து வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  ரேனுகாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தியபோது அவரது கணவரை காணவில்லை. பின்னர், போலீசார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது  ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. தொடர்ந்து வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தபோது, வீட்டின் ஸ்டோர் ரூமில் மறைந்து இருந்துள்ளார். இதனை அடுத்து, அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  மேலும், இவர்கள் வசித்து வந்த வீட்டை ரூ.4.5 கோடிக்கு விற்க முடிவு செய்தார் கணவர் அஜய் நாத்.

இதற்காக ரூ.55 லட்ச அட்வான்சும் வாங்கி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரேனு சின்கா விற்கக் கூடாது என்று பலமுறை கூறியிருக்கிறார். இதனால் இவர்கள்  இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மனைவி வீட்டை விற்க சம்மதம் தெரிவிக்காத ஆத்திரத்தில் கணவர் அஜய் நாத் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
Special bus weekend holidays : விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Embed widget