மேலும் அறிய

Crime: டெல்லியை நடுங்க வைத்த சம்பவம்... பெண் வழக்கறிஞர் கொடூர கொலை... பதுங்கிய கணவர்.. என்ன நடந்தது?

டெல்லியில் பெண் வழக்கறிஞரை அவரது கணவரே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: தலைநகர் டெல்லியில் பெண் வழக்கறிஞரை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை நடுங்க வைக்கும் கொலைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. சமீபத்தில் கூட நடுரோட்டில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெண் வழக்கறிஞர் கொலை:

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ரேனு ஷின்கா (61). இவர் தனது கணவருடன் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவரான அஜய் நாத்  இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி என்று கூட பார்க்காமல் அஜய் நாத், மனைவி ரேனு சின்காவை கொலை செய்துள்ளார். கொலை செய்து மனைவி ரேனு சின்காவின் உடலை பாத்ரூமிலேயே மறைத்து வைத்திருக்கிறார். 

அப்போது, சம்பவத்தன்று மாலை ரேனு சின்காவின் சகோதரர் அவருக்கு வழக்கம் போல் போன் செய்துள்ளார். ஆனால் ரேனு சின்கா அவரது அழைப்பை எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ரேனு சின்காவின் சகோதரர் சம்பவத்தன்று மாலை 3.15 மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். ஆனால் யாரும் கதவை திறக்காதால் சந்தேகமடைந்த ரேனு சின்காவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

என்ன காரணம்?

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரேனு சின்கா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு ரத்து வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  ரேனுகாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தியபோது அவரது கணவரை காணவில்லை. பின்னர், போலீசார் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது  ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. தொடர்ந்து வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தபோது, வீட்டின் ஸ்டோர் ரூமில் மறைந்து இருந்துள்ளார். இதனை அடுத்து, அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  மேலும், இவர்கள் வசித்து வந்த வீட்டை ரூ.4.5 கோடிக்கு விற்க முடிவு செய்தார் கணவர் அஜய் நாத்.

இதற்காக ரூ.55 லட்ச அட்வான்சும் வாங்கி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி ரேனு சின்கா விற்கக் கூடாது என்று பலமுறை கூறியிருக்கிறார். இதனால் இவர்கள்  இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மனைவி வீட்டை விற்க சம்மதம் தெரிவிக்காத ஆத்திரத்தில் கணவர் அஜய் நாத் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget