மேலும் அறிய

Crime: திருமணமான 3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக்கொன்ற இளைஞர் கைது..

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பிரசாத் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சென்னையில் காதல் மனைவியை திருமணமான மூன்றே மாதங்களில் சரமாரியாக வெட்டிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (18). இவர் புளியந்தோப்பு சுந்தரபுரம் முதல் தெருவைச் சேர்ந்த பிரசாத் (எ) குரங்கு பிரசாத் (26) என்பவரைக் காதலித்து வந்தார்.

பிரசாத் மீது ஏற்கனவே நொளம்பூர், ஏழுகிணறு, ஐசிஎப், பேசன் பிரிட்ஜ், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழ்ச் செல்வி பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து இருவரும் வியாசர்பாடி எம்.எம்.கார்டன் இரண்டாவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பிரசாத் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் (செப்.19) இரவு 11 மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்த பிரசாத் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தமிழ்ச்செல்வி பிரசாத்தை தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பிரசாத், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாகக் வெட்டியுள்ளார். இதில், தலை, இடுப்பு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தமிழ்ச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னதாக அதே பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத்தை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் முன்னதாக மதுரை, பாலமேடு அருகே மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபரைக் காவல் துறையினர் முன்னதாகக் கைது செய்தனா். 

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ராஜக்காள்பட்டியைச் சோ்ந்தவா் சீலைக்காரி (34). இவா் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் (44) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். முருகன் மும்பையில் நிதித்தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் முருகன் மதுபோதையில் சீலைக்காரியைத் தொடா்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். இதனால் சீலைக்காரி தனது குழந்தைகளுடன் மும்பையில் இருந்து சொந்த ஊரான ராஜக்காள்பட்டிக்கு கடந்த மாதம் வந்து விட்டாா்.

இந்நிலையில் மும்பையில் இருந்து வந்த முருகன், தனது உறவினரான போஸ் என்பவருடன் ராஜக்காள்பட்டிக்குச் சென்று சீலைக்காரியின் வீட்டை அடித்து சேதப்படுத்தியுள்ளாா்.

இதைத் தட்டிக்கேட்ட சீலைக்காரி மற்றும் அவரது தாய் நல்லதங்காள் ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.இச்சம்பவம் தொடா்பாக சீலைக்காரி அளித்த புகாரின்பேரில் பாலமேடு  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தப்பிச் சென்ற போஸ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget