மேலும் அறிய

Crime : 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை...கூகுள் பேயில் பணம்...கையில் காசு தர்றேன்’ : ஏமாத்துறதுல டாக்டர் பட்டம் வாங்கிடுவாங்களோ..

Crime : அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime : அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வருபவர்கள் தனியார் விடுதிகளில் தங்கி இருப்பது வழக்கமானது. சென்னையில் பல தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை தரமணி அருகே திருவேங்கடம் நகரில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் நீண்டு நேரமாக விடுதியை கவனித்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து முதல் தளத்திற்கு சென்று அங்கு அறையில் தங்கி இருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தார்.

அப்போது அவர்களிடம் நான் கீழ் தளத்தில் புதிதாக வந்திருக்கிறேன் என்று முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு விடுதியை பற்றி சில தகவல்களை கேட்டுக் கொண்டார்.  அங்கு இருக்கும் இளைஞர்களிடம் பேசுகையில், எனது அப்பாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர்களிடம் கூறினார். எனது அப்பாவுக்கு சிகிச்சை அளிக்க என்னிடம் கையில் பணம் இல்லை. அதே வேளையில் எனது கூகுள் பே ஆப் சரியாக வேலை செய்யவில்லை. 

நீங்கள் கூகுள் பேயில் பணம் அனுப்பினால் நான் ஏடிஎம்மில்  பணத்தை எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அந்த இளைஞரின் பேச்சை கேட்டு விடுதியில் இருப்பவர்களுக்கு அவரின் வங்கி கணக்கிற்கு ரூ.5000 அனுப்பியுள்ளனர்.

விடுதியின் மேல் தளத்தில் உள்ளவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டதை அடுத்து, கீழ் தளத்தில் இருப்பவர்களையும் ஏமாற்ற நினைத்தார். அதன்படி, கீழ் தளத்தில் இருப்பவர்களிடம், நான் மேல் தளத்தில் புதிதாக தங்கி இருக்கிறேன். எனது அம்மாவுக்கு உடல்நலக்கு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று அப்பாவி போல் பேசி அவர்களிடம் இருந்து ரூ.5,000 பெற்றுக் கொண்டார்.

பின்பு, அங்கிருந்த புறப்பட்ட சிறிது நேரத்தில் விடுதியில் வசிப்பவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறிகின்றனர். என்னிடம் கையில் பணம் இல்லை. முன்பு அனுப்பி அதே கூகுள் பே எண்ணிற்கு ரூ.40,000 அனுப்ப சொல்லி கேட்டிருக்கிறார். இவர் சொன்னதை நம்பி, பணத்தை அனுப்பி உள்ளனர்.

நீண்ட நேரமாகியும் அந்த நபர் விடுதிக்கு வராததால், அவர்கள் வார்டனிடம் விவரத்தை கேட்டுள்ளார். இதுபோன்ற யாரும் இன்று வரவில்லை என்று கூறினர். பின்பு, விடுதியின் சிசிடிவி கேமராவில் அந்த நபரை பார்த்து உறுதி செய்தனர்.  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்படி, போலீசார் அவரை கைது செய்தனர். மோசடியில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சச்சின்குமார் என்பது தெரிந்தது. 

இதைபோன்று பல விடுதிகளில் இளைஞர்களை ஏமாற்றி பண பறிக்கும் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிந்தது. இதனால் சச்சின்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget