மேலும் அறிய

Scientist Suicide : மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மன உளைச்சல்..! தூக்கிட்டு தற்கொலை செய்த விஞ்ஞானி..!

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் கல்பாக்கத்தில் அணுசக்தி விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்பாக்கம். இங்கு இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு இங்குள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிலையம் மற்றும் பாபா அணுமின் நிலையம் போன்றவை இயங்கி வருகிறது.

இங்குள்ள பாபா அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் அணு விஞ்ஞானியாக பொறுப்பு வகித்து வருபவர் யுவராஜ். இவர் அணுவாற்றல் துறை ஊழியர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். சஞ்சய் பள்ளியில் படித்து வருகிறார். யுவராஜிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரமும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.


Scientist Suicide : மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மன உளைச்சல்..! தூக்கிட்டு தற்கொலை செய்த விஞ்ஞானி..!

இதனால், யுவராஜின் மனைவி கோபித்துக்கொண்டு சென்னையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மனைவி அடிக்கடி தன்னுடன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போடுவதாலும், கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாலும் யுவராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினமும் யுவராஜின் மகன் சஞ்சய் பள்ளிக்கு சென்றிருந்தார். சஞ்சய்க்கு யுவராஜ் மதிய உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து, பள்ளி முடிந்து சஞ்சய் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சஞ்சய் கதவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு வீட்டில் இருந்த மின்விசிறியில் யுவராஜ் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார். தந்தை மின்விசிறியில் சடலமாக தொங்குவதை கண்ட மகன் சஞ்சய் கதறி அழுதுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோதுதான் யுவராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது.


Scientist Suicide : மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் மன உளைச்சல்..! தூக்கிட்டு தற்கொலை செய்த விஞ்ஞானி..!

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு சென்ற காரணத்தாலே யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. கல்பாக்கம் அனுமின் நிலைய ஆராய்ச்சியாளர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்ட் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
திமுகவில் இருந்து விலகிய நிர்வாகி; போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
Embed widget