மேலும் அறிய

Crime: பிளாஸ்டிக் பையில் கிடந்த தொழிலதிபரின் உடல்... சென்னையில் பயங்கரம்... 6 தனிப்படைகள் தீவிர விசாரணை

தொழிலதிபர் கொல்லப்பட்டு கோயம்பேட்டில் இருந்து நெற்குன்றம் செல்லக்கூடிய சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தொழிலதிபர் கொல்லப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்வாயில் பிளாஸ்டிக் பையில் உடல்

சென்னை சின்மயா நகர் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக துப்புரவு பணியாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு முன்னதாகத் தகவல் தெரிவித்துள்ளனனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் றுப்பு நிற பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்டிருந்த சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொழிலதிபர் ஒருவரது சடலம் எனத் தெரிய வந்தது.

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர். இவர் கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செப்.02) இரவு முதல் பாஸ்கரை காணவில்லை என்று அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், தொழிலதிபர் பாஸ்கர் கொல்லப்பட்டு அவரது உடல் கோயம்பேட்டில் இருந்து நெற்குன்றம் செல்லக்கூடிய சாலையில் சின்மயா நகர் பகுதியில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் பையில் அடைத்து சாலையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எடிஎம் கார்டில் எடுக்கப்பட்ட பணம்

இது குறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் கூறுகையில், ``சடலமாக மீட்கப்பட்டவர் பாஸ்கரன் என அடையாளம் தெரிந்துள்ளது. நேற்று காலை வீட்டைவிட்டு காரில் புறப்பட்ட அவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாஸ்கரனைக் காணவில்லை என்று அவரின் மகன் கார்த்திக்  ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் முன்னதாக புகாரளித்துள்ளார். இந்த நிலையில்தான் பிஸாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது காரும் அந்தப் பகுதியில் அநாதையாக நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளோம். தடய அறிவியல் துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். பாஸ்கரனின் கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணிவைத்து, தலையில் அடித்த காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளமும் அவரது உடலில் உள்ளது. மேலும் நேற்றிரவு அவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி இரண்டு தடவை பத்தாயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாஸ்கரனின் சடலம் கிடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம்.

பாஸ்கரனின் சடலத்தைப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகத் தெரிகிறது. 
கொலைசெய்யப்பட்ட பாஸ்கரன், பிசினஸ் செய்துவந்துள்ளார்.

மனைவியுடன் போன் உரையாடல்

கூலிப்படையினர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருப்பதால் எதற்காக பாஸ்கரன் கொலைசெய்யப்பட்டார் என விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரை தனது மனைவியுடன் பாஸ்கரன் செல்போனில் பேசியுள்ளார் எனவும், அவரது ஏடிஎம் கார்டில் இருந்து இரவு 10:40, 10:50 என இரண்டு முறை அதிக அளவு பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக விசாரணையில் கண்டறியப்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை
ஏ.பிளஸ் ரவுடி கொடூரக் கொலை! முகத்தை சிதைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் - நடந்தது என்ன?
ஏ.பிளஸ் ரவுடி கொடூரக் கொலை! முகத்தை சிதைத்துவிட்டு தப்பியோடிய கும்பல் - நடந்தது என்ன?
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Embed widget