மேலும் அறிய

சென்னை கிரைம்: அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி; தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்

நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த பெண்

சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 25 வருடங்களாக 55 வயது பெண்மணி வீட்டு வேலை செய்து கொண்டும் , இவரது கணவர் வாட்ச்மேனாக வேலை செய்து கொண்டும், இருவரும் அங்கேயே தங்கி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த போது, அதிகாலையில் ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து , அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காவல் துறையினர் விசாரணை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கொடுத்த புகார் மீது E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சண்முகம், ( வயது 60 ) என்பவரை கைது செய்தனர்.

செல்போன் திருடிய குற்றவாளி

விசாரணையில் , அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து செல்போன் திருடியதும், பின்னர் புகார்தாரரின் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்து, பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும்  1 சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சண்முகம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆன்லைன் மோசடியில் போலி வங்கி கணக்கு தொடங்கி சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய தம்பதி கைது. ரூ.2.30 லட்சம்  மீட்பு.

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சல்மான் சலீம் ( வயது 29 ) என்பவர் நடத்திவரும் Travel Management அலுவலகத்தில் Vendor நிறுவனத்தில் இருந்து வந்திருந்த EMail ல் கொடுக்கப்பட்டிருந்த Punjab National Bank வங்கி கணக்கில் 17.07.2025 அன்று பணம் ரூ.17,72,868/- பணம் செலுத்தி விட்டதாகவும், பின்னர் Vendor நிறுவனத்தில் பணம் அனுப்பி உள்ளது குறித்து கேட்ட போது , அவர்கள் அந்த மின்னஞ்சல் முகவரி அவர்களுடையது இல்லை என்றும் மேற்படி வங்கி கணக்கும் அவர்களுடையது இல்லை என தெரிவித்துள்ளனர்.

சல்மான் சலீம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது சம்மந்தமாக ஆன்லைனில் புகார் பதிவு செய்தும் , பின்னர் மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் கடந்த 28.07.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் புலன் விசாரணை மேற் கொண்டனர்.

குற்றவாளிகள் கைது

சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் புகார் தாரர் 17.07.2025 - ம் தேதி பணம் அனுப்பிய வங்கி கணக்கானது சிவகாசியில் உள்ள Punjab National bank வங்கி கணக்கு என்பதும் , மேற்படி பணத்தினை வங்கி கணக்கிலிருந்து உரிமையாளர் காசோலைகள் மூலமாக எடுத்து விட்டதாக தெரிய வந்ததால் மேற்படி வங்கி கணக்கின் உரிமையாளர் புஷ்பா ( வயது 35 ) மற்றும் இவரது கணவர் சதுரகிரி ( வயது 41 ) ஆகியோரை காவல் குழுவினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள வீட்டின் அருகில் வைத்து கைது செய்தனர். பணம் ரூ.2,30,000 , 2 செல்போன்கள், வங்கி பாஸ்புக் மற்றும் செக்புக் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் புஷ்பாவை facebook மூலமாக தொடர்பு கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் Chris Otto என்ற நபர் பல கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை அனுப்புவதாகவும், அதற்கான பார்சல் கட்டணத்தை Delta Courier Service company mail Id - ல் தெரிவிப்பார்கள் என கூறியதை நம்பி எதிரிகள் இருவரும் 3 வங்கி கணக்குகளை சைபர் கிரிமினல்கள் கேட்டவாறு தொடங்கி , அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த புது டெல்லி முகவரிக்கு போஸ்ட் செய்தும் பின்னர் புகார் தாரர் வங்கி கணக்கில் இருந்த வந்த பணம்   ரூ.17,72,868/-ஐ Self Withdrawal Cheque வழியாக எடுத்து அவற்றை சைபர் கிரிமினல்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளில் deposit செய்ததாகவும் மீதமிருந்த பணம் ரூ.3,67,500./- அவர்களுடைய செலவிற்கு வைத்து கொண்டது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget