மேலும் அறிய

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்... ஏமாற்றிய காதலன்... 8 மாதத்தில் முறிந்த காதல்... இளம் பெண் தற்கொலை!

மதுராந்தகம் அருகே திருமணமாகி 8 மாதத்தில், வரதட்சணைக் கொடுமையால் செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம்  கிராமத்தை சேர்ந்த மனோகர்.  இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா மற்றும் மனோகர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கவிதா மனோகரை திருமணம் செய்துள்ளார். மனோகர் மீது மகள் ஆசைப்பட்ட காரணத்தினால், கவிதாவின் திருமணத்தை பின்னர் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்... ஏமாற்றிய காதலன்... 8 மாதத்தில் முறிந்த காதல்... இளம் பெண் தற்கொலை!
 
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும், இருவருக்கு இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு அது சண்டையாக மாறி உள்ளது. திருமணமான பிறகு மனோகருக்கு ஏற்கனவே , ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து இருப்பது கவிதாவிற்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இருவரின் காதல் வாழ்க்கை, தினமும் சண்டையுடன் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக கவிதா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் மனோகர், கவிதாவிடம் இருந்து புதிய வீட்டுமனை, இருசக்கர வாகனம் ,25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக,  பெற்றோரிடம் வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார், அடிக்கடி அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்... ஏமாற்றிய காதலன்... 8 மாதத்தில் முறிந்த காதல்... இளம் பெண் தற்கொலை!
இதனால் இருவரும் கடந்த சில வாரங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தனது கணவரை பார்க்க, கணவர் வீட்டிற்கு கவிதா வந்துள்ளார். மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தான் அம்மா வீட்டிற்கு செல்வதாக கவிதா கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்து தன் மனைவி கவிதாவை தன் வீட்டில் வைத்து பூட்டி விட்டு, மனோகர் வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த கவிதா,  வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, மதுராந்தகம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தற்கொலை குறித்து  கவிதாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் வரதட்சணை கொடுமை காரணமாக, பெண் தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால், வருவாய் கோட்டாட்சியர்  தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்... ஏமாற்றிய காதலன்... 8 மாதத்தில் முறிந்த காதல்... இளம் பெண் தற்கொலை!
 
 
இதுகுறித்து கவிதாவின் சகோதரி தெரிவிக்கையில், இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் மனோகர் , இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் பணம், வீட்டுமனை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைக் கேட்டு கவிதாவை தொடர்ந்து நச்சரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனோகர் கவிதாவை அடித்து உதைத்தார். இதனைத் தொடர்ந்து மனோகரிடமிருந்து கவிதாவை, காப்பாற்றுவதற்காக எங்கள் வீட்டில் வைத்து வேலைக்கு அனுப்பி வந்தோம். இந்நிலையில் ,நேற்று தனது வீட்டிற்கு சென்ற கவிதா அங்கு நடந்த சண்டையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். என் தங்கையின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்... ஏமாற்றிய காதலன்... 8 மாதத்தில் முறிந்த காதல்... இளம் பெண் தற்கொலை!
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget