மேலும் அறிய

டிக்கெட் கேட்ட கண்டக்டர்... பளார் விட்ட போலீஸ்காரர்... வெகுண்டு எழுந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள்!

செங்கல்பட்டில் டிக்கெட் கேட்ட நடத்துனரை போலீஸ்காரர் தாக்கியதாக கூறி ஓட்டுநர்கள் ஆஙகாங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டில் டிக்கெட் கேட்ட நடத்துனரை போலீஸ்காரர் தாக்கியதாக கூறி ஓட்டுநர்கள் ஆஙகாங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்தில் வேலைப்பார்க்கும் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒரு நாளாவது பிரச்சனை இல்லாமல் வீட்டிற்கு வருவதே அதிசயம் என்ற அளவிற்கு காலகட்டம் மாறி வருகிறது. 

மாமல்லபுரம் காவல் நிலையத்தில் 2ஆம் நிலை காவலராக பணிபுரிவர் ஹரிதாஸ். திருக்கழுக்குன்றத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் மாமல்லபுரம் செல்ல அரசு பஸ் ஒன்று தயராக இருந்தது. அந்த பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்காக பயணம் செய்ய சாதாரண உடையில் ஹரிதாஸ் அமர்ந்திருந்தார்.

அப்போது பேருந்து நடத்துநர் முருகேசன் என்பவர், காவலர் ஹரிதாசிடம் டிக்கெட் வாங்குமாறு கேட்டதாக தெரிகிறது. அப்போது ஹரிதாஸ் தான் போலீஸ் என்று கூறி டிக்கெட் எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடத்துனர் முருகேசன், அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஹரிதாசிடம் கூறியுள்ளார்.

காவலர் ஹரிதாஸ் தனது அடையாள அட்டையை எடுத்து காண்பித்தபோது அதை நடத்துநர் முருகேசன் தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காவலர் ஹரிதாஸ் நடத்துனர் முருகேசனை தாக்கியதாக தெரிகிறது. 

இந்த சம்பவம் மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தெரிய வர, அவர்கள் ஆங்காங்கே பயணிகளுடன் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சாரோ, செங்கல்பட்டு பஸ் டெப்போ கிளை மேலாளர் மாறன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பேருந்துகளை இயக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசு பேருந்து போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget