மேலும் அறிய

’ஓய்வு பெறும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்’ அடுத்த CBCID இயக்குநர் யார்..?

'சிபிசிஐடி இயக்குநர் ஷகில் அக்தர் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய இயக்குநராக யாரை தமிழக அரசு நியமிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது’

சிபிசிஐடி டிஜிபியாக உள்ள ஷகில் அக்தர் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், பல்வேறு முக்கியமான வழக்குகளை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தலைவராக யார் நியமனம் செய்யப்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் எகிறியுள்ளது.’ஓய்வு பெறும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்’ அடுத்த CBCID இயக்குநர் யார்..?

சிறப்பு பிரிவுகளில் முக்கியமான சிபிசிஐடி

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கை தவிர்த்து பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக, ஆயுதப்படை பிரிவு, கடலோர காவல்படை, குற்றப்பிரிவு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு, சைபர் க்ரைம், சீருடை பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்பு படை உள்ளிட்ட பல பிரிவுகள் அதற்கென தனி ஐ.பி.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ’ஓய்வு பெறும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்’ அடுத்த CBCID இயக்குநர் யார்..?

ஓய்வு பெறும் ஷகில் அக்தர் - புதிய டிஜிபி யார் ?

அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு பிரிவு சிபிசிஐடி என்ற மாநில அரசின் சிறப்பு குற்ற புலனாய்வு துறை. தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையால் மேல் விசாரணை செய்ய முடியாத வழக்குகள் / பிரச்னைக்குரிய வழக்குகள் / முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த பிரிவிற்கு அனுபவமும் திறமையும் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியே இதுவரை டிஜிபியாக நியமிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போதைய டிஜிபியாக இருக்கும் ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், சிபிசிஐடி போலீஸ்க்கு புதிய டிஜிபியாக யாரை தமிழ்நாடு அரசு நியமிக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்
சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்

 

சிபிசிஐடியை பொறுத்தவரை, இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. முதல் பிரிவை பொறுத்தவரை, ஆயுதங்கள், வெடிபொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது, சர்வதேச குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகள், மோசடி, போதை பொருட்கள் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் கையாளப்படுகிறது. இரண்டாவது பிரிவில் கொலை, கொள்ளை, திருட்டு, அரசியல் ஆதாய குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.  தற்போது தமிழ்நாட்டில் மிக முக்கியமான வழக்குகளை கையாண்டு வரும் சிபிசிஐடி போலீசாருக்கு தலைவராக நியமிக்கப்படப்போகும் நபர் யார் என்ற கேள்வி காவல்துறை வட்டாரங்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

இறுதிப்பட்டியலில் இரண்டு அதிகாரிகள்

அந்த வகையில், இந்த பொறுப்புக்கு அபய்குமார் சிங் ஐபிஎஸ், மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் ஆகிய இருவரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இருவரில் ஒருவர் சிபிசிஐடி தலைவராக நியமிக்கப்படவிருப்பதாகவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஜிபி அபய்குமார் சிங் IPS
ஏடிஜிபி அபய்குமார் சிங் IPS

தற்போது அபய்குமார் சிங் ஆயுத படைபிரிவு ஏடிஜிபியாகவும், மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும் உள்ளனர். சிபிசிஐடி இயக்குநர் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரே நியமிக்க முடியும் என்றாலும் இந்த இருவரும் ஒரு சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்படவிருப்பதால், இருவரில் ஒருவர் சிபிசிஐடி இயக்குநராக நியமிக்கப்படுவது உறுதி என டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்

அதனடிப்படையில், தற்போது ஆயுதபடைப்பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் அபய்குமார் சிங்கிற்கு சிபிசிஐடி இயக்குநர் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கரூர் காகித நிறுவன கண்காணிப்பு அதிகாரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி என்று அதிமுக்கியமற்ற துறைகளை கவனித்து வந்த அபய்குமார் சிங்கை சிபிசிஐடி இயக்குநராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்குமார் அகர்வாலும் இந்த போட்டியில் இருந்தாலும் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

யார் பெரிய ரவுடி ? வீடியோவால் வந்த வினை !! இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் கொடூரக் கொலை
யார் பெரிய ரவுடி ? வீடியோவால் வந்த வினை !! இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் கொடூரக் கொலை
ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
ஏமாற்றுவதில் PhD படித்த கில்லாடி !! கணவனை பிரித்து.. நகையை சுருட்டி 'சிங்கப்பூர்' நாடகம்
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget