மேலும் அறிய

புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

புதுச்சேரி பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்கு பதிவு - ஐந்து பேர் கைது

புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல ரவுடி லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற பொடிமாஸ் (வயது 27).  இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீசில் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சரத்குமார் ஓராண்டுக்கு பின் வெளியே வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி (23) என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.


புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சரத்குமார் ஊருக்குள் நுழைய லாஸ்பேட்டை போலீசார் தடை விதித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெளியூர்களில் அவர் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரத்குமார், அரியாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.  ஆனால் கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் லாஸ்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வெங்கடேசன் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், அவருடன் சரத்குமாரும் தங்கி இருந்தார். அரியாங்குப்பம் (தெற்கு) போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் வெங்கடேசன் வீடு உள்ளது.


புதுச்சேரி: பிரபல ரவுடி பொடிமாஸ் கொலை வழக்கு - 10 பேர் மீது வழக்கு பதிவு; 5 பேர் கைது

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து கதவை தட்டியது. தூக்க கலக்கத்தில் இருந்த வெங்கடேசன் கதவை திறந்தார். உடனே அவரை அந்த கும்பல் வெளியே இழுத்து கை, கால்களை கட்டி அங்குள்ள கழிவறையில் போட்டு அடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒரு அறையில் படுத்து தூங்கிய சரத்குமாரை அந்த கும்பல் சுற்றிநின்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

Police Have Arrested Six People, Including The Owner Of An Iron Workshop  Who Had Prepared Terror Weapons For A Nallavadu Fisherman | புதுச்சேரி  உள்ளாட்சித் தேர்தல்: மீனவர்களுக்கு வீச்சு அரிவாள் ...

இதில் கழுத்து, தலை, முகம், கைகள், இடுப்பு என உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்து போய் இருந்தது. இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரத்குமார் துடிதுடித்து இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சரத்குமாரின் உடலை பார்வையிட்டனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர கொலை குறித்து வெங்கடேசன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரத்குமாரை கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget