மேலும் அறிய

Crime : பில்லி சூனிய சக்தியை அடைய பெற்ற மகனையே நரபலி கொடுத்த தந்தை..! பீகாரில் கொடூரம்..

இறந்த ஏழு வயது சிறுவனின் தாய் குஷ்பூ தேவி தனது அறிக்கையில், விஜயதசமி அன்று இரவு தனது மகன் ராகவை கொன்றதாக தனது கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரின் பாங்கா மாவட்டத்தில் பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் தனது ஏழு மகனைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பில்லி சூனியம்

பில்லி சூனியம் காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சிலர் மாந்திரீகத்தின் மீது அலாதி நம்பிக்கை கொண்டு, அதன் மூலம் தமக்கு பயன் கிடைக்கும் என்று நம்பி சில குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். சமயத்தில் யாரோ ஒருவரை பலி கொடுக்கும் நிலைக்கு பில்லி சூனியம் அவரை தள்ளுகிறது. பில்லி, சூனியம், நரபலி என்று யாராவது ஒருவரை காணிக்கை கொடுத்து அவர்கள் அடைய வேண்டியதை அடையலாம் என்று நினைத்து கொலைக் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். சமயத்தில் சிலர் தங்களது மகனையோ, மகளையோ கூட கொலை செய்கின்றனர் என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். அதே போல ஒருவர் மாந்திரீக சக்திகளை பெறுவதற்காகவே தனது மகனை ஆயுத பூஜை அன்று கொலை செய்த சம்பவம் பீஹாரில் நடந்தேறி உள்ளது. 

Crime : பில்லி சூனிய சக்தியை அடைய பெற்ற மகனையே நரபலி கொடுத்த தந்தை..! பீகாரில் கொடூரம்..

மகனை கொலை செய்த தந்தை

குற்றம் சாட்டப்பட்ட தீபக் ஷர்மா, மாந்திரீகம் செய்து சூனியம் வைப்பதற்காக விஜய தசமி அன்று இரவு தனது ஏழு வயது மகன் ராகவ் குமாரை கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. பாங்கா மாவட்டத்தில் உள்ள அமர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மஹோடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்: நாங்க எதுக்கு நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகணும்..?’ அப்படி தான் இருக்கு பிக்பாஸ் ப்ரொமோ!

தந்தை கைது

இறந்த ஏழு வயது சிறுவனின் தாய் குஷ்பூ தேவி தனது வாக்குமூலத்தில், விஜயதசமி அன்று இரவு தனது மகன் ராகவை கொன்றதாக தனது கணவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதனை தொடர்ந்து "தீபக் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, வெள்ளிக்கிழமையன்று அவரை வீட்டின் அருகில் உள்ள சந்தேகத்தை எழுப்பும் வகையிலான இடத்தில் இருந்து கைது செய்துள்ளோம்", என்று அமர்பூர் காவல்நிலைய தலைமை அதிகாரி சுனில் குமார் கூறினார்.

Crime : பில்லி சூனிய சக்தியை அடைய பெற்ற மகனையே நரபலி கொடுத்த தந்தை..! பீகாரில் கொடூரம்..

கொலை செய்தது ஏன்..?

மேலும், காவல்துறை அதிகாரி கூறும்போது தமது மகனை கொன்றுவிட்டு, தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள புதர்களுக்குப் பின்னால் தீபக்குமார் ஒளிந்து கொண்டிருந்தார் என்றும் கூறினார். அங்குதான் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் சுனில்குமார் கூறினார். "அவரது அறையில் நடத்திய சோதனையில், சூனியம் தொடர்பான சில புத்தகங்கள், சென்சார் கேமரா மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றை நாங்கள் மீட்டுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில மாதங்களாக சூனியத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் விஜய தசமி அன்று யாகம் செய்ய காத்திருந்தார். சூனிய மந்திரங்களின் சக்தியை அடைய அவரது மகனை பலிக்கொடுத்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
Honda Shine vs Hero HF Deluxe: ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
Gaming Mobiles Under 15000: நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget