மேலும் அறிய

கருப்பு மாப்பிள்ளையை ‛ரிஜக்ட்’ செய்த தங்கை; கோடரியால் வெட்டிக் கொன்ற அண்னன்!

மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்து வந்த இளம்பெண்ணை அவரது அண்ணன் கோடரியால் வெட்டிக்கொன்றார்.

பெங்களூரு: ராய்ச்சூர் அருகே மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்து வந்த இளம் பெண்ணை அவரது அண்ணன் கோடரியால் வெட்டிக்கொன்றார். செவ்வாய்க்கிழமை இன்று  திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 22). இவரது அண்ணன் ஷியாம் சுந்தர் (28). இந்த நிலையில் சந்திரகலாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்திருந்தனர்.  இந்த நிலையில்  (13-ந்தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  இருந்தது. 

ஆனால் மாப்பிளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு சந்திரகலா மறுத்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் பெற்றோர், சகோதரர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.  திருமண நாள் நெருங்கி வந்ததால் சந்திரகலாவின் வீட்டில் பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். திருமணத்திற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் சந்திரகலா மாப்பிள்ளை கருப்பாக உள்ளார். எனவே தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவரது அண்ணன் ஷியாம் சுந்தர் அதிர்ச்சி அடைந்தார்.  மேலும் ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கூறியுள்ளார்.  இதனால் அண்ணன்-தங்கை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 


கருப்பு மாப்பிள்ளையை ‛ரிஜக்ட்’ செய்த தங்கை; கோடரியால் வெட்டிக் கொன்ற அண்னன்!

அப்போது ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் கோடரியால் சந்திரகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. சமபவம் பற்றி தகவல் அறிந்ததும் கப்பூர் போலீசார் விரைந்து வந்து, கொலையான சந்திரகலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேவதுர்கா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீஸ் விசாரணையில், தன்னை திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளை கருப்பாக இருந்ததால் திருமணத்திற்கு சந்திரகலா மறுத்ததும், இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் அவரை கோடரியால் வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம் சுந்தரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணத்திற்கு மறுத்த கட்டாய திருமணம் நடத்திவைக்க முயன்ற பெற்றோர் தற்போது வளர்த்த மகளை ,அண்ணன் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


குடும்ப அமைப்பு முறையை சிறந்த தொரு முன் மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன. திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது பெண்களுக்கு பிடிக்காத ஒருவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget