மேலும் அறிய

சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

ஆரணியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சாப்பிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மாத்திரைகளை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை தெற்கு தெரு , மணியம்மை வீதி,பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள சுடுக்காடு பகுதிகளில் கல்லூரி,பள்ளி மாணவர்கள் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயண்படுத்துவதாக ஆரணி நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் கோகுல் ராஜ் தலைமையில் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பெரியார் நகர் சுடுக்காட்டு பகுதியில் உள்ள முட்புதர்களில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தி போதையில் இருந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்து சென்ற போதை இளைஞர்கள் போதையில் ஆட்டம் ஆடி கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தனர். 

 


சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

 

இதனை கண்ட காவல்துறையினர் 4 இளைஞர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 100கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றினர் காவல்துறையினர். பின்னர் போதை இளைஞர்களை நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணி டவுன் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ்ராஜ் வயது (21), முஸ்தபா வயது (19) மற்றும் இரண்டு சிறார்கள் ஆகியோர் என்பது தெரியவந்தது.மேலும் 4 இளைஞர்களிடம் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆரணி பையூர் சாலை 4 முனை சந்திப்பில் ஓரு மருந்து கடையில் 500 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கியது தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் 4 நபர்களையும் கைதுசெய்தனர். இதனையடுத்து பையூர் கூட்ரோட்டில் உள்ள மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் வயது (40) என்பவரை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 


சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

 

மேலும் உடனாடியாக ஆரணி டவுன் ஆய்வாளர் கோகுல்ராஜ் செய்யார் சரக மருத்துவ ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மருந்து கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ( பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் பயன்படுத்தபடும் )  மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பயண்படுத்திய முஸ்தபா, தனுஷ்ராஜ் ஆகியோர் இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சிறார்களுகளை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதனையொடுத்து கடையின் உரிமையாளர் பையூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகன் விஜயகுமார் என்பவரிடம் மருத்துவத் துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget