மேலும் அறிய

சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

ஆரணியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சாப்பிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மாத்திரைகளை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை தெற்கு தெரு , மணியம்மை வீதி,பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள சுடுக்காடு பகுதிகளில் கல்லூரி,பள்ளி மாணவர்கள் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயண்படுத்துவதாக ஆரணி நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் கோகுல் ராஜ் தலைமையில் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பெரியார் நகர் சுடுக்காட்டு பகுதியில் உள்ள முட்புதர்களில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தி போதையில் இருந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்து சென்ற போதை இளைஞர்கள் போதையில் ஆட்டம் ஆடி கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தனர். 

 


சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

 

இதனை கண்ட காவல்துறையினர் 4 இளைஞர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 100கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றினர் காவல்துறையினர். பின்னர் போதை இளைஞர்களை நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணி டவுன் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ்ராஜ் வயது (21), முஸ்தபா வயது (19) மற்றும் இரண்டு சிறார்கள் ஆகியோர் என்பது தெரியவந்தது.மேலும் 4 இளைஞர்களிடம் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆரணி பையூர் சாலை 4 முனை சந்திப்பில் ஓரு மருந்து கடையில் 500 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கியது தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் 4 நபர்களையும் கைதுசெய்தனர். இதனையடுத்து பையூர் கூட்ரோட்டில் உள்ள மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் வயது (40) என்பவரை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 


சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

 

மேலும் உடனாடியாக ஆரணி டவுன் ஆய்வாளர் கோகுல்ராஜ் செய்யார் சரக மருத்துவ ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மருந்து கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ( பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் பயன்படுத்தபடும் )  மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பயண்படுத்திய முஸ்தபா, தனுஷ்ராஜ் ஆகியோர் இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சிறார்களுகளை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதனையொடுத்து கடையின் உரிமையாளர் பையூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகன் விஜயகுமார் என்பவரிடம் மருத்துவத் துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
Rasi Palan Today (25-08-2026): கும்பத்துக்கு வெற்றி.. மீனத்துக்கு மகிழ்ச்சி.. இன்று உங்க ராசிக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (25-08-2026): கும்பத்துக்கு வெற்றி.. மீனத்துக்கு மகிழ்ச்சி.. இன்று உங்க ராசிக்கு நல்லது நடக்குமா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Embed widget