மேலும் அறிய

சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

ஆரணியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை சாப்பிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மாத்திரைகளை விற்ற மருந்துக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை தெற்கு தெரு , மணியம்மை வீதி,பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள சுடுக்காடு பகுதிகளில் கல்லூரி,பள்ளி மாணவர்கள் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயண்படுத்துவதாக ஆரணி நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் கோகுல் ராஜ் தலைமையில் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பெரியார் நகர் சுடுக்காட்டு பகுதியில் உள்ள முட்புதர்களில் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தி போதையில் இருந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்து சென்ற போதை இளைஞர்கள் போதையில் ஆட்டம் ஆடி கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தனர். 

 


சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

 

இதனை கண்ட காவல்துறையினர் 4 இளைஞர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 100கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றினர் காவல்துறையினர். பின்னர் போதை இளைஞர்களை நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணி டவுன் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ்ராஜ் வயது (21), முஸ்தபா வயது (19) மற்றும் இரண்டு சிறார்கள் ஆகியோர் என்பது தெரியவந்தது.மேலும் 4 இளைஞர்களிடம் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆரணி பையூர் சாலை 4 முனை சந்திப்பில் ஓரு மருந்து கடையில் 500 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கியது தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் 4 நபர்களையும் கைதுசெய்தனர். இதனையடுத்து பையூர் கூட்ரோட்டில் உள்ள மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் வயது (40) என்பவரை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 


சுடுகாட்டு புதருக்குள் போதை ஆட்டம்! மகப்பேறு மாத்திரையும் போதை இளைஞர்களும்! அதிர வைக்கும் ஆரணி சம்பவம்!

 

மேலும் உடனாடியாக ஆரணி டவுன் ஆய்வாளர் கோகுல்ராஜ் செய்யார் சரக மருத்துவ ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மருந்து கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ( பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் பயன்படுத்தபடும் )  மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்றது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மருந்து கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பயண்படுத்திய முஸ்தபா, தனுஷ்ராஜ் ஆகியோர் இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு சிறார்களுகளை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதனையொடுத்து கடையின் உரிமையாளர் பையூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் மகன் விஜயகுமார் என்பவரிடம் மருத்துவத் துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
குடும்ப தகராறு வன்முறையாக மாறியது: கோவையில் கணவர் கைது...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget