மேலும் அறிய

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி! 48 மணி நேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை - ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திராவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்த சோகத்தால் 48 மணி நேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்காலங்களில் அவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த தேர்வுகளில் சில மாணவர்கள் எளிதாக தேர்ச்சி அடைகின்றனர். பல மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் தோல்வி அடைகின்றனர். பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குடும்பத்தினராலும், அக்கம்பக்கத்தினராலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். சில மாணவர்கள் தேர்வுகள் தோல்வியால் தற்கொலை முயற்சியை மேற்கொள்கின்றனர். இது தவறான செயல் ஆகும்.

பொதுத்தேர்வு தோல்வி:

ஆந்திரா மாநிலத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. அந்த மாநிலத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 61 சதவீத மாணவர்களும், 12ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் 17 வயதான மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதபோல, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்த 16 வயது மாணவி ஒருவர், வீட்டிலே தற்கொலை செய்து கொண்டார்.

48 மணி நேரத்தில் 9 பேர்:

அதேபோல, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த சோகத்தில் விசாகப்பட்டினம் காஞ்சரபெலத்தில் 18 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்தூரில் 17 வயதே நிரம்பிய 2 மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே சித்தூர் மாவட்டத்தில் ஆற்றில் குதித்த மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனகப்பள்ளியில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு தோல்வி காரணமாக 9 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது வாழ்க்கையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது முக்கியமானதே ஆகும். அதேசமயம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வாழ்வே முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் அல்ல என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும். பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்தால் மீண்டும் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை தரக்குறைவாக பேசுவதும், கேலி செய்வதும் மிகவும் தவறான செயல் ஆகும்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்க: Crime: ச்ச்சீ... ச்ச்சீ..! மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு மத்தியில் இளைஞர் செய்த 'அந்த' காரியம்..! அதிர்ச்சியில் பயணிகள்..!

மேலும் படிக்க: Crime: கணவனை உயிரோடு எரித்துக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை - நடந்தது என்ன?

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
" கணவரைப் பற்றி பேசனும் " தனியாக வரவழைத்து அத்துமீறல் - சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
DVAC Raid: ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
DMK BJP: திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
TN Govt: ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
Swift CNG: ரூ.9000 பட்ஜெட்டில் 33KM மைலேஜ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்.. அசத்தலான பாதுகாப்பு, முழு EMI விவரங்கள்
ரூ.9000 பட்ஜெட்டில் 33KM மைலேஜ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்.. அசத்தலான பாதுகாப்பு, முழு EMI விவரங்கள்
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,680 சரிந்தது தங்கம் விலை.! 3 நாளில் தலைகீழ் மாற்றம்- வெள்ளி விலையும் குறைந்தது
சவரனுக்கு ரூ.3,680 சரிந்தது தங்கம் விலை.! 3 நாளில் தலைகீழ் மாற்றம்- வெள்ளி விலையும் குறைந்தது
Embed widget